இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

👬அரசு ஊழியர் யார்?🧍‍♂️ (Govt Emplayees)

படம்
  தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும். ”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும். தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.. 1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class) ...

புனித் (Punith Rajkumar)

படம்
          புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர். 46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது. நேற்று இரவு 12 மணி வரையிலும்  பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே  நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித். இன்று காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒ...

புதிதாக ஏதாவது பொருள் வாங்கும் போது அதில் உள்ள சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடுபவரா நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது

படம்
  புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க... வீட்டில் நாம் புதிதாக ஏதேனும் பொருள்கள் வாங்குகின்ற பொழுது, அதற்குள் சிறியதாக இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட் ஒன்றை வைத்திருப்பார்கள். அந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை கீழே தூக்கிப் போடாமல் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். நாம் ஏதேனும் புதுப்பொருட்கள், செப்பல்கள், டிரஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இவையெல்லாம் வாங்கினால் அதனுள் சின்னதா ஒரு பாக்கெட் வைத்து இருப்பார்கள். அது தான் சிலிக்கா பாக்கெட். அதில் குழந்தைகள் கையில் படாமல் அப்புறப்படுத்தவும் என்று எழுதியிருக்கும். நாமும் அது எதற்கு என்று தெரியாமலே தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். இவற்றில் இருக்கும் நன்மைகளை நீங்கள் அறிந்தால் அதை கீழே போட மனசு இருக்காது. தம்மா துண்டு பாக்கெட்டுக்குள் அவ்வளவு நன்மைகள் இருக்காம் . இந்த சிலிக்கான் பாக்கெட்டுகள் ஒரு உலர்விப்பான் மாதிரி செயல்படுகிறது. பொருட்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை எப்பொழுதும் ப்ரஷ்ஷாக வைத்து இருக்குமாம். சரி இந்த பாக்கெட்டை கொண்டு நாம் எப்படியெல்லாம் பயன் அடையலாம் வாங்க...