இடுகைகள்

தன்னிகரில்லாத் தலைவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

த. பிரகாசம்

படம்
  பெயர் : த . பிரகாசம் பிறப்பு : 23-08-1872 இறப்பு : 20-05-1957 பெற்றோர் : வெங்கட நரசிம்மன் - சுப்பம்மாள் இடம் : ஐதராபாத் , ஆந்திரப் பிரதேசம் வகித்த பதவி : வழக்கறிஞர் , எழுத்தாளர் , அரசியல்வாதி விருதுகள் : ஆந்திர கேசரி     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   த . பிரகாசம் இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார் . இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார் .   பிறப்பும் படிப்பும் :   பிரகாசம் 1872 ஆம் ஆண்டு தற்கால ஆந்திர மாநிலம் , ஒங்கோல் நகரத்தின் அருகேயுள்ள வினோத ராயுடு பாலம் என்ற கிராமத்தில் பிராமண ஜாதியில் பிறந்தார் . இவரது பெற்றோர் வெங்கட நரசிம்மன் மற்றும் சுப்பம்மாள் . சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் , சென்னையில் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார் . பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் .   சுதந்திர போராட்டத்தில் :   1907 ஆம் ஆண்டு வங்காள தேசியவாதி பிபின் ...

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (OMANTHUR RAMASAMY REDDIYAR)

படம்
பெயர் : ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறப்பு : கி.பி 1895 இறப்பு : 25-08-1970 இடம் : ஓமந்தூர், தென் ஆற்காடு, சென்னை, தமிழ்நாடு வகித்த பதவி : வழக்கறிஞர், எழுத்தாளர், ஆட்சியாளர், அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்...

ப. சுப்பராயன் (P.SUPPARAYAN)

படம்
  பெயர் : ப. சுப்பராயன் இயற்பெயர் : பரமசிவ சுப்பராயன் பிறப்பு : 11-9-1889 இறப்பு : 06-10-1962 பெற்றோர் : பரமசிவம், பாவாயி இடம் : குமரமங்கலம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : முதலமைச்சர், இந்திய அரசியல்வாதி, சுதந்திர போராளி மற்றும் தூதுவர், வழக்கறிஞர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு பரமசிவ சுப்பராயன், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு குமரமங்கலத்தில் பிறந்தார். இவரது தந்தை குமரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தார் பரமசிவ கவுண்டர். தாயார் பெயர் பாவாயி. சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப்பயிற்சி பட்டமும் (LLD) பெற்றார். 1918 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பரமசிவ சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கா...

எம். பக்தவத்சலம் (M.BHAKTAVATSALAM)

படம்
  பெயர் : எம். பக்தவத்சலம் பிறப்பு : 09-10-1897 இறப்பு : 31-01-1987 இடம் : ஶ்ரீபெரும்புதூர், சென்னை, தமிழ்நாடு வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர், தமிழக முன்னாள் முதல்வர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு எம். பக்தவத்சலம், சென்னை ஶ்ரீபெரும்புதூர் அடுத்த நசரத்பேட்டையில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது தந்தை காலமானார். தாய்மாமன்களின் ஆதரவில் வளர்ந்தார். சென்னையில் ஆரம்பக் கல்வி பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அது, இந்திய விடுதலைப் போராட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவந்த நேரம். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், திலகர், விபின் சந்திரபால் ஆகிய தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். வக்கீல் தொழிலை விட்டு, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். 1936-ல் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், ‘இந்தியா’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ‘தேசபக்தன்’ உட்பட பல பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். ஒத்துழ...

சேகுவாரா

படம்
  பெயர் : சேகுவாரா பிறப்பு : 14-06-1928 பெற்றோர் : ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிலியா டெ ல செர்னா இடம் : அர்ஜென்டீனா வகித்த பதவி : புரட்சியாளர் வரலாறு:-சேகுவாரா !! 👉 உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும், அது ஏன்? எதற்கு? எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது. 👉 அப்படியான ஒரு உருவம்தான், முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு, சிகார் சகிதமாக, கம்பீரமான ஆளுமையாக, டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான். 👉 கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர். புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன். சேகுவாரா யார்? 👉 ஏழைகளை அன்போடு அரவணைப்பவர். 👉 ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி. 👉 மேலும், கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். 👉 சேகுவாரா என்றால் விடுதலை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும். 👉 சேகுவாரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின்...

செண்பகராமன் பிள்ளை (Shenbagaraman Pillai)

படம்
பெயர் : செண்பகராமன் பிள்ளை பிறப்பு : 15-09-1891 இறப்பு : 26-05-1934 பெற்றோர் : சின்னசாமிப்பிள்ளை,  நாகம்மாள் இடம் : புத்தன் சந்தை, திருவனந்தபுரம், இந்தியா வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு வீரன் செண்பகராமன் எனும் பெயரை முதல் உலக யுத்தத்தின் போது கேட்டவர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு வந்த ‘எம்டன்’ எனும் ஜெர்மானிய கப்பலில் இருந்து குண்டு வீசித் தாக்கிய செய்தியில் செண்பகராமன் பிள்ளையின் பெயர் அடிபடலாயிற்று. இவரைப் பற்றிய ஒரு சில நூல்கள் வெளியாகியுள்ளன. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஒரு தலைவராக இருந்த கவிஞர் வானம்பாடி அவர்கள் வீரன் செண்பகராமன் பற்றிய ஒரு நூலையும் எழுதியிருக்கிறார். கவிஞர் வானம்பாடி தஞ்சை காசுக்கடைத்தெருவில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘வானம்பாடி அச்சகம்’ என்ற ஒரு அச்சகம் வைத்திருந்தார். ஒரு வகையில் ம.பொ.சி. அவர்கள்தான் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், வ.உ.சிதம்பரம் பிள்ளையை ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அடைமொழி சேர்த்து பெருமை சேர்த்த வகையிலும், மேலும் பற்பல சுதந்திரப் போர் புரிந்த பலர் வரலாறுகளையும் வெளிக் கொண்டுவ...

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyana Sundaram)

படம்
பெயர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறப்பு : 13-04-1930 இறப்பு : 08-10-1959 பெற்றோர் : அருணாச்சலனார், விசாலாட்சி இடம் : செங்கப்படுத்தான்காடு, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வகித்த பதவி : தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத்தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார். குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார். சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது. விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவ...

இராசகோபாலாச்சாரி (Rajagopalachari)

படம்
  பெயர் : இராசகோபாலாச்சாரி பிறப்பு : 10-12-1878 இறப்பு : 25-12-1972 பெற்றோர் : சக்கரவர்த்தி வெங்கடார்யா, சிங்காரம்மா இடம் : தொரப்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு புத்தகங்கள் : திண்ணை ரசாயனம், சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்தி, கண்ணன் காட்டிய வழி, பஜகோவிந்தம், கைவிளக்கு, உபநிஷதப் பலகணி, ரகுபதி ராகவ, முதல் மூவர், திருமூலர் தவமொழி, பக்தி நெறி, ஆத்ம சிந்தனை, ஸோக்ரதர், திண்ணை இரசாயனம், பிள்ளையார் காப்பாற்றினார், ஆற்றின் மோகம், வள்ளுவர் வாசகம், ராமகிருஷ்ண உபநிஷதம், வேதாந்த தீபம். வகித்த பதவி : இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் விருதுகள் : பாரத ரத்னா வரலாறு:-வாழ்க்கை வரலாறு இராஜகோபாலச்சாரி இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர். அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்ற...

கக்கனை தொட்ட அந்த நொடியில் (Kakkan)

படம்
கக்கனை தொட்ட அந்த நொடியில்,  கடவுளை தொட்டது போல உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அது 1980. மதுரை அரசு பொது மருத்துவமனை.  அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் மதுரை முத்து, சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காகத்தான் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார் எம்ஜிஆர். பார்த்து முடித்து விட்டார். இனி புறப்பட வேண்டியதுதான். நேரம் ஆக ஆக எம்ஜிஆரை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. எம்ஜிஆர் தன்னை சுற்றிலும் பார்த்தார். சற்று தள்ளி நின்ற காளிமுத்து எம்ஜிஆருக்கு அருகே ஓடோடி வந்தார். "போகலாமா ?" என்றார் எம்ஜிஆர். அப்போதுதான் எம்ஜிஆரின் காதுகளில் ஏதோ சொன்னார் காளிமுத்து. ஒரு கணம் திகைத்துப் போனார் எம்ஜிஆர். "நிஜமாகவா ?" "ஆமாம்." "இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை ?" சட்டென்று மருத்துவமனைக்குள் மீண்டும் நுழைந்தார் எம்ஜிஆர். "எங்கே இருக்கிறார் அவர் ?" விறுவிறுவென்று நடந்து வந்த எம்ஜிஆரை அந்த சாதாரண வார்டுக்குள் அழைத்து சென்றார்கள் மருத்துவ அதிகாரிகள். உள்ளே நுழைந்த எம்ஜிஆர் கண் கலங்கி நின்றார். அட...

கக்கன் என்பது பெயரல்ல நேர்மையின் அடையாளம் (Kakkan)

படம்
ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில்,சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன "உயர் திரு கக்கன் பிறந்த தினம்" இன்று.... தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்.... கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.  விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது... கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் ம...