இடுகைகள்

அரசியல் தலைவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆர். கே. சண்முகம் (R.K.SHANMUGAM)

படம்
பெயர் : ஆர். கே. சண்முகம் பிறப்பு : 17-10-1892 இறப்பு : 03-05-1953 பெற்றோர் : ஆர். கந்தசாமி செட்டியார் , ஸ்ரீரங்கம்மாள் இடம் : கோயம்புத்தூர் புத்தகங்கள் : குற்றாலக் குறவஞ்சிக்கு உரை வகித்த பதவி : வழக்கறிஞர், அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர். இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர் ஆவார். 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர். வாழ்க்கைக் குறிப்பு: தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள். கோவை யூனியன் உயர...

த. பிரகாசம்

படம்
  பெயர் : த . பிரகாசம் பிறப்பு : 23-08-1872 இறப்பு : 20-05-1957 பெற்றோர் : வெங்கட நரசிம்மன் - சுப்பம்மாள் இடம் : ஐதராபாத் , ஆந்திரப் பிரதேசம் வகித்த பதவி : வழக்கறிஞர் , எழுத்தாளர் , அரசியல்வாதி விருதுகள் : ஆந்திர கேசரி     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   த . பிரகாசம் இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார் . இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார் .   பிறப்பும் படிப்பும் :   பிரகாசம் 1872 ஆம் ஆண்டு தற்கால ஆந்திர மாநிலம் , ஒங்கோல் நகரத்தின் அருகேயுள்ள வினோத ராயுடு பாலம் என்ற கிராமத்தில் பிராமண ஜாதியில் பிறந்தார் . இவரது பெற்றோர் வெங்கட நரசிம்மன் மற்றும் சுப்பம்மாள் . சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் , சென்னையில் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார் . பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் .   சுதந்திர போராட்டத்தில் :   1907 ஆம் ஆண்டு வங்காள தேசியவாதி பிபின் ...

பி. டி. இராஜன் (P.T.RAJAN)

படம்
  பெயர் : பி . டி . இராஜன் இயற்பெயர் : பொன்னம்பல தியாகராஜன் பிறப்பு : 1892 இறப்பு : 1974 இடம் : உத்தமபாளையம் , தேனி வகித்த பதவி : வழக்கறிஞர் , அரசியல்வாதி     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   பி . டி . ராஜன் என்றழைக்கப்பட்ட பொன்னம்பல தியாகராஜன் சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார் . ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிச் பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி . டி . ராஜன் 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார் . 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார் . முதல்வராக இருந்த பொபிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை மாகாணத்தின் தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தார் . 1944 இல் பெரியார் ஈ . வே . ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இணைய மறுத்த...

எம்.ஜி.ஆர் (MGR)

படம்
  பெயர் : எம்.ஜி.ஆர் இயற்பெயர் : மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் பிறப்பு : 17-01-1917 இறப்பு : 24-12-1987 பெற்றோர் : கோபாலமேன், சத்தியபாமா இடம் : கண்டி, இலங்கை புத்தகங்கள் : நாடோடி மன்னன் வகித்த பதவி : அரசியல்வாதி, நடிகர் விருதுகள் : பாரத் விருது, அண்ணா விருது, பாரத ரத்னா விருது, பத்மஶ்ரீ விருது, வெள்ளியானை விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக...

ஏ. சுப்பராயலு (A.SUBBARAYALU)

படம்
  பெயர் : ஏ. சுப்பராயலு பிறப்பு : 15-10-1855 இறப்பு : 1921 இடம் : தென் ஆற்காடு வகித்த பதவி : தமிழக முன்னாள் முதல்வர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு திவான் பகதூர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவார். சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறையின் கீழ் நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற பின், மாகாணத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழு மாத காலமே பதவியில் இருந்த அவர் ஜூலை 1921 இல் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.  அவரது பிறப்பும் படிப்பும்:  சுப்பராயுலு ரெட்டியார் 1855 ஆம் வருடம் அக்டோபர் 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு ஆகும். செல்வச் செழிப்பு மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டப் படிப்பை படித்தார். ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை:  சுப்பராயலு 1912 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆரம்ப க...

மூவலூர் ராமாமிர்தம் (MOOVALUR RAMAMIRTHAM)

படம்
பெயர் : மூவலூர் ராமாமிர்தம் பிறப்பு : கி.பி. 1883 இறப்பு : கி.பி. 1962 இடம் : மூவலூர் கிராமம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு மூவலூர் ராமாமிர்தம் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்னாள் தேவதாசி மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கிராமத்தில் பிறந்தவர். இவர் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936ல் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் 1925ல் பெரியார் (ஈ. வெ. ராமசாமி) காங்கிரசிலிருந்து விலகியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். 1930ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி ...

எஸ் கஸ்தூரி ரங்கா ஐயங்கார் (S.KASTHURI RANGA AYYANAR)

படம்
பெயர் : எஸ் கஸ்தூரி ரங்கா ஐயங்கார் பிறப்பு : 15-12-1859 இறப்பு : 12-12-1923 பெற்றோர் : சேஷ ஐயங்கார் இடம் : கும்பகோணம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி, பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், ஹிந்து நிர்வாக இயக்குனர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு பிறப்பு கஸ்தூரி ரங்கன், கும்பகோணம் அருகேயுள்ள இன்னாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சேஷ ஐயங்காருக்கு மூன்றாவது மகனாக 15.12.1859-ல் பிறந்தார். சேஷ ஐயங்கார் குடும்பத்தினர் விஜயநகர சாம்ராஜ்யத்திலும் தஞ்சை மராட்டிய அரசிலும் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள். இன்னாம்பூரிலும் கபிஸ்தலத்திலும் பின்னர் கும்பகோணத்திலும் படித்தார். 1879 -ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கஸ்தூரி ரங்கன் பட்டம் பெற்றார். 1881-ல் சார்பதிவாளர் பணியில் சேர்ந்தார். பிறகு, சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர் 1884-ல் சட்டக் கல்வி முடித்தார். வழக்கறிஞரானதும் கோவையை நோக்கி நகர்ந்தார் கஸ்தூரி ரங்கன். அங்கு கெளரவ மாஜிஸ்திரேட்டாகவும், சிறையைப் பார்வையிடும் சிறப்புப் பார்வையாளராகவும் ஆட்சியரால் நியமிக்கப்பட்டார். அந்நாளில் ‘தி இந்து’ வின் ஆசிரியராக இருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் 1902-ல் ஓய்வுபெற்றார். அந்த பத...

முகம்மது இசுமாயில் (MOHAMMED ISHMAYIL)

படம்
பெயர் : முகம்மது இசுமாயில் பிறப்பு : 05-06-1896 இறப்பு : 05-04-1972 பெற்றோர் : மியாகான் ராவுத்தர் இடம் : திருநெல்வேலி, தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். குடும்பம்: திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான். பிரிட்டிசு இந்தியாவில்: தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் ந...

தோழர் கே. டி. கே. தங்கமணி (T.K.THANGAMANI)

படம்
பெயர் : தோழர் கே. டி. கே. தங்கமணி பிறப்பு : 19-05-1914 இறப்பு : 26-12-2001 இடம் : திருமங்கலம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு கே. டி. கே. தங்கமணி இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர். பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். பிறப்பு: கே.டி.கே. தங்கமணி (எ) தங்கமணி நாடார், தமிழ்நாடு, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சட்டப்படிப்பை இலண்டனில் முடித்து 1947ம் ஆண்டு மதுரை திரும்பினார். இங்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாக 1947 மற்றும் 1948 ஆண்டுகள் (மதுரை டி.வி.எஸ் நிறுவனம் மற்றும் ஹார்வே மில்) போராடிச் சிறை சென்றுள்ளார். மேலும் 1957ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றியும் பெற்றார். தனது போராட்டங்கள் மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், அகில இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பதவி வகித்தார். மறைவு மற்றும் நினைவகம்: தன் 88ஆவது வயதில் 2001 டிசம்பர் 26 அன்று கோவைய...

லீலாவதி (LEELAVATHI)

படம்
பெயர் : லீலாவதி பிறப்பு : 27-09-1957 இறப்பு : 23-04-1997 பெற்றோர் : வெங்கடாசலம்-இந்திரா இடம் : கோவில்பட்டு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு லீலாவதி, மதுரை மாநகராட்சி, வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர். இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனை. தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காகப் போராடியவர். பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை:  மதுரை மாநகரில் கைத்தறி தொழிலை பிராதனமாகச் சார்ந்திருக்கும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்-இந்திரா தம்பதியரின் மூன்றாவது புதல்வியாக 1957-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று பிறந்தார். அவர் 10வது வகுப்பில் படிக்கும்போது குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் நெசவு வேலை செய்தார். பெற்றோர் நிச்சயித்தபடி அவருக்கும் குப்புசாமிக்கும் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியென்று திருமணம் நடைபெற்றது. குப்புசாமி - லீலாவதி தம்பதியினருக்கு கலாவதி, துர்கா, டான்யா என்ற மூன்று மகள்க...

டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு (P.VARATHARAJULY NAIDU)

படம்
பெயர் : டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு பிறப்பு : 04-06-1887 இறப்பு : 23-07-1957 பெற்றோர் : பெருமாள் நாயுடு, குப்பம்மாள் இடம் : சேலம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி, விடுதலை போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு பெ. வரதராஜுலு நாயுடு இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். சித்த ஆயுர்வேத மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். பிறப்பு: தமிழ்நாடு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் 1887 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி வரதராஜுலு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள். 24ஆம் வயதில் அவர் ருக்மணி என்பவரைத் திருமணம் செய்த கொண்டார். உயர்நிலைக் கல்வி கற்கும் பொழுதே நாடெங்கும் பரவிய வந்தே மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. ‘முற்போக்காளர் சங்கம்’ எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார். அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். அவர் சித்...

மோகன் குமாரமங்கலம் (MOHAN KUMARAMANGALAM)

படம்
பெயர் : மோகன் குமாரமங்கலம் பிறப்பு : 01-11-1916 இறப்பு : 31-05-1973 பெற்றோர் : ப. சுப்பராயன், இராதாபாய் இடம் : லண்டன் வகித்த பதவி : அரசியல்வாதி, வழக்கறிஞர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு மோகன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதியும் புகழ் பெற்ற வழக்கறிஞரும் ஆவார். இவர் பொதுவுடமை கொள்கையின் பால் ஈர்ப்பு கொண்டவர். முதலி்ல் இந்திய பொதுவுடமைக்கட்சியிலும் பின்னர் காங்கிரசு கட்சியிலும் பங்குவகித்தார். இவர் புதுச்சேரி மக்களவை உறுப்பினராக 1971-1972 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1973 மே 31 இல் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். ­கல்வி: சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப. சுப்பராயன் - இராதாபாய் தம்பதி்க்கு மூன்றாவது மகனாக லண்டனி்ல் 1916ம் ஆண்டு பிறந்தார். கோபால் குமாரமங்கலம், ப. பி. குமாரமங்கலம் ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள். இவர் ஈடன், கிங் கல்லூரிகளிலும் கேம்பிரிச்சிலும் கல்வி கற்றார். கேம்பிரிச்சில் இருந்த போது கேம்பிரிச் சங்கத்தின் (Cambridge Union Society) தலைவராக 1938ல் பதவி வகித்தார். கேம்பிரிச்சில் இருந்த போது பொதுவுடமைக்கொள்கையின் பால் ஈர்ப்புகொண்டார். இன்னர் டெம்பிளில் வழக்கறிஞராக பதிவு ச...

மேயர் டி. செங்கல்வராயன் (SENGALVARAYAN)

படம்
பெயர் : மேயர் டி. செங்கல்வராயன் பிறப்பு : கி.பி 1908 பெற்றோர் : மாணிக்கவேலு முதலியார், மரகதம் அம்மாள் இடம் : திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு வகித்த பதவி : சென்னை நகர மேயர், அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு டி. செங்கல்வராயன் விடுதலைப் போராட்ட வீரரும், வழக்கறிஞரும், குறிப்பிடத்தக்க மேடைப்பேச்சாளருமாவார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புதூருக்கு அருகேயுள்ள தண்டலத்தில் பிறந்தவர். பெற்றோர் மாணிக்கவேலு முதலியார், மரகதம் அம்மாள். சென்னை கிருத்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பும், பம்பாயில் சட்டப்படிப்பும் மேற்கொண்டார். தன் 26 ஆவது வயதில் மணம் புரிந்தார். 27 வயதில் காங்கிரசில் சேர்ந்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகச் சத்தியமூர்த்தி இருந்தபோது, இவர் செயலாளராக இருந்தார். பின்னர் தலைவரானார். 1939–1940 இல் தனிநபர் சத்தியாகிரகம் நடைபெற்றபோது 4 மாதங்களாகச் சென்னையிலும், அலிப்பூரிலும் சிறையில் அடைக்கப்பட்டார். 1980 இல் தீவிர அரசியலிருந்து விலகினார். பேச்சுக்கலை, ரஷ்ய வெளியுறவுக் கொள்கை, இந்திய வெளியுறவுக் கொள்கை ஆகியவை குறித்து நூல்கள் எழுதியுள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினராக...

முத்துவிநாயகம் (MUTHU VINAYAGAM)

படம்
பெயர் : முத்துவிநாயகம் பிறப்பு : கி.பி 1914 இடம் : தூத்துக்குடி, தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு தியாகி முத்துவிநாயகம் 1914இல் தூத்துக்குடியில் பிறந்தார். மகாத்மா காந்தியடிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினார். காங்கிரசில் சேர்ந்த நாள் முதலாக இறுதி வரை இவர் கதர் உடைகளைத்தான் அணிந்திருந்தார். 1930இல் காங்கிரசில் சேர்ந்த இவர் 1931, 32இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார், அன்னிய துணி எதிர்ப்பு இயக்கத்திலும் ஈடுபட்டார். அப்போது இவர் சிறுவனாக இருந்த காரணத்தால் இவர் தண்டிக்கப்படவில்லை. 1943இல் ஶ்ரீவைகுண்டத்தில் ஒரு காங்கிரஸ் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீஸ்காரர்களின் மிரட்டல் காரணமாக அந்த கூட்டம் நடைபெற முடியாமல் போனது. இதனைக் கேள்விப்பட்ட முத்துவிநாயகம் தானே ஒரு தமுக்கை எடுத்துக் கொண்டு போய் அடித்துத் தெருத் தெருவாக பொதுக்கூட்டம் நடக்கும் விவரத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டத்துக்கு அழைத்தார். அந்தக் கூட்டத்தில் இவரே இரண்டு மணி நேரம் பேசினார். மறுநாள் இவர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார். 1935இல்...