இடுகைகள்

இணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ப்ரீபெய்ட் சிம் பயனர்களுக்கான மினிமம் ரீசார்ஜ் கட்டணத்தை மாற்றிய ஏர்டெல் : காரணம் என்ன?

படம்
உலக அளவில் கடல் கடந்து வசிப்பவர்களையும் நொடி பொழுதில் தொடர்பு கொள்ள உதவுகிறது தொலைத்தொடர்பு சாதனங்கள். அதில் மிக முக்கியமான பணியை செய்து வருவது டெலிகாம் நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் கொடுக்கின்ற சிம் கார்டுகளை வைத்துதான் நாம் அனைவரையும் தொடர்பு கொள்கிறோம்.  தற்போது இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ‘ஏர்டெல் இந்தியா’ தனது ப்ரீபெய்ட் கட்டண விவகாரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அந்த மாற்றங்கள் அந்நிறுவனத்தின் பயனர்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது. அது என்ன மாற்றம்? என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் குறித்து பார்ப்போம்.  இந்திய டெலிகாம் நிறுவனங்கள்! இந்தியாவை பொறுத்தவரை ஏர்டெல், ஜியோ, வி மாறும் BSNL (அரசு நிறுவனம்) என நான்கு டெலிகாம் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதற்கு முன்னர் இருந்த சில நிறுவனங்கள் தொழில் போட்டி காரணமாக மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் தங்களது நிறுவனத்தை இணைத்து விட்டு சென்றுள்ளன.  ஜியோவின் வருகை! ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு புரட்சி பிறந்துள்ளது என்றே சொல்ல வேண்ட...

திவாலாகும் அபாயத்தில் வோடஃபோன் - ஐடியா... 27 கோடி வாடிக்கையாளர்களின் நிலை இனி?

படம்
திணறவைக்கும் கடன் சுமையால் திண்டாடி வரும் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு 27 கோடி வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர் என்பதும், அந்த நிறுவனம் திவாலானால் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் என்பதும் என்பதும் கவலையை உண்டாக்கியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் - ஐடியா திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம், ரூ.1.8 லட்சம் கோடி கடன் என்பதும், தற்போது அதை அடைக்க போதிய வருமானம் இல்லை என்பதும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் நிலை. இந்த நிறுவனத்தில் 26 சதவிகிதம் உரிமையாளராக உள்ள குமார் மங்கலம் பிர்லா "எனது பங்குகளை நான் இலவசமாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் வசம் கொடுத்து விடுகிறேன். அரசே வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோலவே வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் 45 சதவிகிதம் உரிமையை...

புதுசா ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? Apply Smart Ration Card Online

படம்
  ரேஷன் கார்டு என்பது அனைத்து குடும்பங்களிடமும் இருக்க வேண்டிய அடிப்படை மற்றும் தேவையான ஒரு ஆவணம் ஆகும். ஆன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டைப் பெறுவதற்கான புதிய முறையையும், tnpds.gov.in எனும் தமிழக பொது விநியோக அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரேஷன் கார்டு ஆன்லைன் விண்ணப்ப சேவை 2016 முதல் நடைமுறையில் உள்ளது, இது மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. TNPDS வலைத்தளத்தில் ஆன்லைன் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான படிப்படியான நடைமுறை இங்கே: www.tnpds.gov.in எனும் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்குச் செல்லவும் முகப்புப்பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள “மின்னணு அட்டை சேவைகள்” (Smart Card Applications Services) எனும் பிரிவின் கீழ் உள்ள “மின்னணு அட்டை விண்ணப்பிக்க” (Smart Card Application) என்பதைக் கிளிக் செய்க. அதைக் கிளிக் செய்த பிறகு, விண்ணப்ப படிவத்துடன் ஒரு புதிய பக்கம் தோன்றும். மேல் இடதுபுறத்தில் புதிய மின்னணு அட்டை...

ஆதாரில் மொபைல் எண் மாற்ற, புகைப்படம்மாற்ற என்ன செய்யவேண்டும் முழு விவரம்...

படம்
ஆதார் கார்டில் புகைப்படம் மாற்ற  ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பெரும்பாலும் தெளிவு இல்லாமல் இருக்கும். அந்த புகைப்படத்தை எப்படி மாற்ற வேண்டும்  ஆதாரில் பெயர், முகவரி போன்ற திருத்தங்களை ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். ஆனால், புகைப்படத்தை மாற்றுவதற்கு ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும்.  ஆதார் சேவை  மையம் சென்று ஆதாரில் உள்ள புகைபடத்தை மாற்ற வேண்டும் என கூறினால்  அங்கு என்ரோல்மெண்ட் படிவம் ஒன்று கொடுப்பார்கள்   அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்தில் வழங்க வேண்டும் .  அடுத்து அங்கு உங்களது கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவுசெய்து புதிய புகைபடமும் எடுப்பார்கள் பிறகு ஆதாரில் உங்கள் புதிய புகைப்படம்  அப்டேட் செய்யப்படும் .  இதற்கு  கட்டணம் வசூலிக்கப்படும் . ஆதாரில் போட்டோ அப்டேட் செய்ததற்கான எண்ணும், அதற்கான ரசீதும் உங்களுக்கு வழங்கப்படும் .  அந்த நம்பரை வைத்து உங்களது அப்டேட் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் . போட்டோ அப்டேட் ஆனவுடன் புதிய ஆதார் கார்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்  ஆதார் கார்டில் உள்ள ...