இடுகைகள்

ஆன்மீகம் / கோவில்களின் வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுவாமி விவேகானந்தர் (SWAMY VIVEKANANDAR)

படம்
பெயர் : சுவாமி விவேகானந்தர் பிறப்பு : 12-01-1863 பெற்றோர் : விசுவநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி இடம் : கல்கத்தா வகித்த பதவி : ஆன்மிகவாதி வரலாறு:-சுவாமி விவேகானந்தர்..!! 👳 நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் படிக்கும்போது, அந்த தலைவர்கள் அத்தனை பேருக்கும் பின்னணியில் ஒரு உண்மையான உந்து சக்தியாக இருந்தவர் யார் என்றால், அவர் வேறு யாருமில்லை - சுவாமி விவேகானந்தர்தான். 👳 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த சமய தலைவர்களுள் ஒருவர். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்து சமயத்தை வளர்த்தவர். 👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் ஸ்ரீ 'ராமகிருஷ்ண மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.  👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் அவதாரம...

சீரடி சாய்பாபா (SEERADI SAIBABA)

படம்
பெயர் : சீரடி சாய்பாபா வகித்த பதவி : ஆன்மிகவாதி வரலாறு:-சீரடி சாய்பாபா !! 👉 ஒவ்வொருவரும் இந்த பூமியில் மனிதனாக பிறப்பதற்கு ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். அப்படி ஒவ்வொருவரும் புல், மரம், புழுவாக மற்றும் மேலும் பல உயிரினங்களாக பிறப்பெடுத்ததற்கு பிறகுதான் இந்த அரிய மானுட பிறப்பை எடுக்கின்றனர். 👉 ஆனால், இம்மானுடப்பிறவியின் முக்கிய நோக்கம் என்னவென்று தெரியாமலே பலர் தவறான வழிக்குச் செல்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்த சில ஞானிகள் தோன்றுவதுண்டு. அவ்வாறு தோன்றிய அவதார புருஷர்களில் அற்புதமானவர்தான் சாய்பாபா. ஒரு மகானாக சீரடி சாய்பாபா : 👉 சீரடி சாய்பாபா தனது பதினாறு வயதில், ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்தார். பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். 👉 அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் 'உடல் நிலை சரியில்லை' என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். 👉 அவருடை...

கிருபானந்த வாரியார் (KIRUBANANTHA VARIYAR)

படம்
பெயர் : கிருபானந்த வாரியார் இயற்பெயர் : கிருபானந்த வாரி பிறப்பு : 25-08-1906 இறப்பு : 07-11-1993 பெற்றோர் : மல்லையதாசர், மாதுஶ்ரீ கனகவல்லி இடம் : காட்பாடி, வேலூர் மாவட்டம் புத்தகங்கள் : சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம் வகித்த பதவி : ஆன்மீகவாதி விருதுகள் : இசைப்பேரறிஞர் விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். ‘அருள்மொழி அரசு’, என்றும் ‘திருப்புகழ் ஜோதி’ என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு :  இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஶ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி ப...

ஆண்டாள் (ANDAL)

படம்
  பெயர் : ஆண்டாள் இயற்பெயர் : கோதை புத்தகங்கள் : திருப்பாவை, நாச்சியார் திருமொழி வகித்த பதவி : வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார். ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஶ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழ...

திருமழிசையாழ்வார் (THIRUMAZHISAIALWAR)

படம்
  பெயர் : திருமழிசையாழ்வார் இடம் : திருமழிசை புத்தகங்கள் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் வகித்த பதவி : ஆழ்வார்களில் ஒருவர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். இவர், நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக திருமாலை உயர்வாகச் சொல்லியவை.

ஶ்ரீ. ஶ்ரீ. ரவிசங்கர் (SRI. SRI. RAVISANKAR)

படம்
  பெயர் : ஶ்ரீ. ஶ்ரீ. ரவிசங்கர் பிறப்பு : 13-05-1956 பெற்றோர் : ஶ்ரீ.ஶ்ரீ. வேங்கட ரத்னம், விசாலாட்சி இடம் : பாபநாசம், தமிழ்நாடு வகித்த பதவி : ஆன்மீக தலைவர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு ஶ்ரீ.ஶ்ரீ. ரவிசங்கர், ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஶ்ரீ.ஶ்ரீ.என்று மரியாதையுடன் அழைக்கப்படும் இவர், வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஶ்ரீ. ஶ்ரீ. வேங்கட ரத்னம் என்ற மொழி வல்லுனருக்கும் விசாலாட்சி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். அவர் ஆதி சங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் அவருக்கு சங்கர் என்று பெற்றோர் பெயரிட்டனர். நான்கு வயதிலேயே பகவத் கீதை என்கிற இந்து புனித நூலை ஒப்பிக்கத் தெரிந்து வைத்திருந்தார். இளமைப் பருவத்திலேயே ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் வல்லமை பெற்றிருந்தார் என்று கருதப்படுகிறது. பதினேழு வயதில் முன்னிலை இயற்பியல் பட்டம் பெற்றார். இவர் மகரிஷி மகேஷ் யோகியிடம் சீடராக இருந்தார். அவரத...

சுவாமி குருபரானந்தர் (SWAMY GURUPARANANDA)

படம்
பெயர் : சுவாமி குருபரானந்தர் இடம் : தமிழ்நாடு புத்தகங்கள் : ஆன்மீகப் பாதையில், நற்பண்புகள், உபநிடதங்களின் விளக்க உரை, சாந்தி பாடங்கள், Human Values (ஆங்கிலம்) வகித்த பதவி : ஆன்மீகவாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு சுவாமி குருபரானந்தர் மரபு நெறிப்படி அத்வைத வேதாந்த சாத்திரங்களை கற்பிக்கும் ஆசிரியர். இவர் சுவாமி பரமார்த்தனந்த சரசுவதியின் சீடர். தம் குருநாதரிடம் முறைப்படி வேதாந்த சாத்திரங்களைப் பயின்றவர். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களிடம் துறவற தீட்சை பெற்றவர். ஆன்மிகப் பணிகள்: சுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம். வேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்...

ஸ்ரீ ராமரின் 68 தலைமுறை முன்னோர்களை தெரிந்து கொள்வோம்.

படம்
  1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி 7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா 8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா . 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா 15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா 16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா  19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா . 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத் 23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2 24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா . 31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2 32. ஹர்யஷ்வாவின் மகன் -...

கரிநாளில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த கூடாதா? கரிநாளில் அப்படி என்னதான் இருக்கிறது?

படம்
  நம் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால், அந்த நாள் நல்ல நாளா என்பதை நாள்காட்டியில் பார்த்துவிட்டு தான், சுப நிகழ்ச்சியை வைக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வோம். இந்த பழக்கம் பொதுவாக பல பேருக்கு உண்டு. அப்படி அந்த நாள் காட்டியில் கரிநாள் என்று இருந்தால், அந்த நாட்களில் எந்த ஒரு நல்ல காரியமும் நடத்தக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றுள்ளார்கள். இதை நம் அம்மா அப்பாவில் இருந்து, நாம் அனைவரும் இன்று வரை பின்பற்றி வருகின்றோம்.  கரிநாளில் சூரியனின் வெப்பமானது அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பூமியில் அதிகமாக விழுவதால் நம் உடலின் இயக்கமானது வழக்கத்திற்கு மாறாக செயல்படும். அதாவது ஹார்மோன்கள் சராசரி அளவை விட அதிகமான அளவில் சுரக்கும். தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். இதனால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். சாதாரணமாக இருக்கும் போதே நமக்கு இவ்வளவு பிரச்சனைகள் வரும். இதனோடு வீட்டில் சுப விசேஷங்களையும் வைத்துக் கொண்டால் அதன் மூலம் நமக்கு ஏற்படும் அலைச்சல்களும், வேலைகளும் அதிகமாக இருக்கும். அந்த வேலைகளை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற நம்முடைய ...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம்

படம்
  #1000 #ஆண்டுகளாக #கட்டப்பட்ட #ஆலயம்! திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின...

ஆன்மிகம் என்பதன் புரிதல்

படம்
  ஆன்மிகம் என்பது ஏதோ குடும்ப கடமைகளை எல்லாம் முடித்து விட்டு வயதான காலத்தில் வாழும் வாழ்வு என்றே பெரும்பாலோர் நினைத்துக்கொண்டு இருக்கினறனர். *ஆன்மிகம் என்பது வாழ்வியல் ஆகும்*. எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதே ஆன்மிகம் ஆகும். அதை வாழ்ந்து முடித்தபின் வயதான காலத்தில் தெரிந்து என்ன செய்வது. ஆன்மிகம் என்பது எங்கோ இருக்கும் கடவுளை பற்றியதோ  எங்கும் பரவி நிற்கும் இயற்கை பற்றியதோ எல்லாம் கிடையாது. *அது முழுக்க முழுக்க உங்களைப்பற்றியது*. உங்களைப் பற்றியும், உங்களின் உள்ளார்ந்த இயக்கங்கள் பற்றியும், அதற்கு ஆதாரமான இயக்க சக்தி பற்றி தெளிவாக எடுத்துக் கூறும் விஞ்ஞானமே ஆன்மிகம். உங்களின் எண்ணங்கள் என்பது என்ன?.  எண்ணங்கள் எப்படி உருவாகிறது.?  மனம் என்பது என்ன.? அதன் செயல்பாடுகள் என்ன.? அந்த மனசக்தியை எப்படி தன்னை உணர்தலுக்கு பயன்படுத்துவது.?  மனதின் பதிவுகளாகிய உணர்ச்சிகளை எப்படி கையாள்வது? அறிவு என்றால் என்ன? அதை எப்படி கையாள்வது.? ஒவ்வொரு செயல்களின் மூலம் தொடரும் வினைப்பயன்கள் என்ன?  அதை எப்படி இல்லாமல் செய்வது.?  இவற்றிற்கெல்லாம் காரணமாக இருந்து செயல...