இடுகைகள்

சுதந்திர போராட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுப்பிரமணிய சிவா

படம்
பெயர் : சுப்பிரமணிய சிவா இயற்பெயர் : சுப்பராமன் பிறப்பு : 04-10-1884 இறப்பு : 23-07-1925 பெற்றோர் : ராஜம் ஐயர்,நாகம்மாள்(நாகலட்சுமி) இடம் : வத்தலகுண்டு, திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா புத்தகங்கள் : மோட்ச சாதனை ரகசியம், ஶ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம், அருள் மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம், ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை, சச்சிதானந்த சிவம், பகவத்கீதா சங்கிலகம், சங்கர விஜயம், ராமானுஜ விஜயம், சிவாஜி (நாடகம்), தேசிங்குராஜன் (நாடகம்), நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு இவர் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிகையாளர். 1913-இல் ‘ஞானபாநு’ இதழை நடத்தியவர். விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். ‘வீரமுரசு’ எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மா...

வெ. இராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai)

படம்
பெயர் : வெ. இராமலிங்கம் பிள்ளை பிறப்பு : 19-10-1888 இறப்பு : 24-08-1972 பெற்றோர் : வெங்கடராமன், அம்மணியம்மாள் இடம் : மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு புத்தகங்கள் : மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண், பிரார்த்தனை (கவிதை), நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறளும் பரிமேலழகரும், திருவள்ளுவர் திடுக்கிடுவார், திருக்குறள் புது உரை, கம்பனும் வால்மீகியும், கம்பன் கவிதை இன்பக் குவியல், என்கதை (சுயசரிதம்), அவனும் அவளும் (கவிதை), சங்கொலி (கவிதை), மாமன் மகள் (நாடகம்), அரவணை சுந்தரம் (நாடகம்) வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் விருதுகள் : பத்ம பூஷன் வரலாறு:-வாழ்க்கை வரலாறு இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932இல் நடைபெற்ற உப்...

பூலித்தேவன் (Poolithevan)

படம்
  பெயர் : பூலித்தேவன் இயற்பெயர் : காத்தப்பப் பூலித்தேவர் பிறப்பு : 01-09-1715 இறப்பு : கி . பி .1767 பெற்றோர் : சித்திரபுத்திரர் , சிவஞான நாச்சியார் இடம் : நெற்கட்டுஞ்செவ்வல் , திருநெல்வேலி , தமிழ்நாடு வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன் . தென்பாண்டி நாட்டில் , திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன் ! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலோச்சிய பாளையக்காரனாவான் . தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன் இவன் .   இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘ வெள்ளையனே வெளியேறு ’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான் .   மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது . இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வரா...

செண்பகராமன் பிள்ளை (Shenbagaraman Pillai)

படம்
பெயர் : செண்பகராமன் பிள்ளை பிறப்பு : 15-09-1891 இறப்பு : 26-05-1934 பெற்றோர் : சின்னசாமிப்பிள்ளை,  நாகம்மாள் இடம் : புத்தன் சந்தை, திருவனந்தபுரம், இந்தியா வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு வீரன் செண்பகராமன் எனும் பெயரை முதல் உலக யுத்தத்தின் போது கேட்டவர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு வந்த ‘எம்டன்’ எனும் ஜெர்மானிய கப்பலில் இருந்து குண்டு வீசித் தாக்கிய செய்தியில் செண்பகராமன் பிள்ளையின் பெயர் அடிபடலாயிற்று. இவரைப் பற்றிய ஒரு சில நூல்கள் வெளியாகியுள்ளன. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஒரு தலைவராக இருந்த கவிஞர் வானம்பாடி அவர்கள் வீரன் செண்பகராமன் பற்றிய ஒரு நூலையும் எழுதியிருக்கிறார். கவிஞர் வானம்பாடி தஞ்சை காசுக்கடைத்தெருவில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘வானம்பாடி அச்சகம்’ என்ற ஒரு அச்சகம் வைத்திருந்தார். ஒரு வகையில் ம.பொ.சி. அவர்கள்தான் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், வ.உ.சிதம்பரம் பிள்ளையை ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அடைமொழி சேர்த்து பெருமை சேர்த்த வகையிலும், மேலும் பற்பல சுதந்திரப் போர் புரிந்த பலர் வரலாறுகளையும் வெளிக் கொண்டுவ...

சுப்பிரமணிய சிவா (Subramania Siva)

படம்
  பெயர் : சுப்பிரமணிய சிவா இயற்பெயர் : சுப்பராமன் பிறப்பு : 04-10-1884 இறப்பு : 23-07-1925 பெற்றோர் : ராஜம் ஐயர்,நாகம்மாள்(நாகலட்சுமி) இடம் : வத்தலகுண்டு, திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா புத்தகங்கள் : மோட்ச சாதனை ரகசியம், ஶ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம், அருள் மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம், ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை, சச்சிதானந்த சிவம், பகவத்கீதா சங்கிலகம், சங்கர விஜயம், ராமானுஜ விஜயம், சிவாஜி (நாடகம்), தேசிங்குராஜன் (நாடகம்), நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு இவர் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிகையாளர். 1913-இல் ‘ஞானபாநு’ இதழை நடத்தியவர். விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். ‘வீரமுரசு’ எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்...

எஸ்.சத்தியமூர்த்தி (S.Sathyamoorthi)

படம்
பெயர் : எஸ். சத்தியமூர்த்தி பிறப்பு : 19-08-1887 இறப்பு : 28-03-1943 இடம் : திருமயம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவராவார். 1937-38 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர். இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க எண்ணிய ஆங்கில அரசைப் பார்த்து ‘நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம், யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை’ என துணிச்சலாக கூறி தன்னுடைய சுதந்திர உணர்வை வெளிபடுத்தியவர் எஸ். சத்தியமூர்த்தி அவர்கள். பிறப்பு: சத்திய மூர்த்தி அவர்கள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டத் தலைநகரமான ‘திருமயம்’ என்ற ஊரில் பிறந்தார். இவர் ஆச்சாரமான பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை...

வாஞ்சிநாதன்

படம்
வாஞ்சிநாதன் செங்கோட்டையைச்  சேர்ந்தவர். அவருடைய தந்தை ரகுபதி ஐயர், திருவாங்கூர் தேவஸ்தானத்தில்  ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். வாஞ்சி, திருவாங்கூர் சாமஸ்தான வனத்துறையில் புனலூர் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி  பொன்னம்மாள். வாஞ்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக குறிப்புகள் சொல்கின்றன.   வ.உ.சிக்கு எதிராக ஆஷ் எடுத்த நடவடிக்கைகள் வாஞ்சியின் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. இனி பொறுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். தனது சகாக்களுடன் கூடினார். அங்கு ஆஷ் கொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது.  யார் ஆஷை சுடுவது என்றும் விவாதிக்கப்பட்டது.  எல்லோரும் நான், நீ என்று போட்டிபோட, இறுதியில் அனைவரின் பெயரையும் துண்டுச் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது என்று முடிவானது. பெயர்கள் தாங்கிய சீட்டுக் குவியலிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்பட்டது. அதில்  எழுதப்பட்டிருந்த பெயர் ‘வாஞ்சிநாதன்’. வாஞ்சிக்கு மகிழ்ச்சி.   அலுவலகத்திற்கு மூன்று மாதங்கள் லீவு எடுத்தார்.  அனைவரிடமும் விடைபெற்று பாண்டிச்சேரிக்கு ஆயு...

ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ்

படம்
  106 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான்.  உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’  என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் பெட்டியை தனியாக பிரித்து அதை போட் மெயிலோடு இணைத்து கொடைக்கானல் பயணத்தை தொடங்குவதற்காக அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட் மெயில் 10.48 மணிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த இடைவெளியில் ஆஷின் பாதுகாவலன் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றிருந்தான்.  இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான மணித்துளிகள் அவை.   ‘இந்தியன் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவான், எப்படி அடித்தாலும் தாங்கிக்கொள்வான்’, என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிந்தனைக்கு சாவு மணி அடித்த மணித்துளிகள்.  ஒரு டிப்டாப் ஆசாமி.  நீளமான தனது தலை முடியை மடித்து கட்டியிருந்தார்.  ஏதோ அலுவலகத்திற்கு செல்வது போல உடை.  ஆஷ் இருந்த முதல் வகுப்பு பெட்டியில்...