இடுகைகள்

Freedom Fighters லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராமச்சந்திர நாயக்கர்

படம்
பெயர் : ராமச்சந்திர நாயக்கர் இடம் : சேந்தமங்கலம், நாமக்கல் வகித்த பதவி : விடுதலை போராட்ட வீரர், படைத் தளபதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம், நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர் ராமச்சந்திர நாயக்கர். கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது. கொங்கு நாட்டில் 17ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. விசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படுத்தி அதன்படி தென்தமிழகம், கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர். பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது. அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று. இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெறும் வரையில் ஆட்சி செய்துள்ளார். அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும், திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆ...

வாண்டாயத் தேவன் (VANADAYA THEVAN)

படம்
  பெயர் : வாண்டாயத் தேவன் இடம் : சிவகங்கை , இராமநாதபுரம் , தமிழ்நாடு வகித்த பதவி : அரசர் , விடுதலைப் போராட்ட வீரர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன் . ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில் , நெல்கட்டுஞ்செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார் .   முதற்போர் :   இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள் . ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது . அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர் . 1766 ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர் . பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப...

சுப்ரமணிய பாரதியார் (SUBRAMANIA BHARATHIAR)

படம்
  பெயர் : சுப்ரமணிய பாரதியார் இயற்பெயர் : சுப்பிரமணியன் , சுப்பையா பிறப்பு : 11-12-1882 இறப்பு : 12-09-1921 பெற்றோர் : சின்னசாமி ஐயர் , இலக்குமி அம்மாள் இடம் : எட்டயபுரம் , தூத்துக்குடி , தமிழ்நாடு புத்தகங்கள் : குயில் பாட்டு , கண்ணன் பாட்டு , சுயசரிதை ( பாரதியார் ), தேசிய கீதங்கள் , பாரதி அறுபத்தாறு , ஞானப் பாடல்கள் , தோத்திரப் பாடல்கள் , விடுதலைப் பாடல்கள் , விநாயகர் நான்மணிமாலை , பாரதியார் பகவத் கீதை ( பேருரை ), பதஞ்சலியோக சூத்திரம் , நவதந்திரக்கதைகள் , உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கம் , ஹிந்து தர்மம் ( காந்தி உபதேசங்கள் ), சின்னஞ்சிறு கிளியே , ஞான ரதம் , பகவத் கீதை , சந்திரிகையின் கதை , பாஞ்சாலி சபதம் , புதிய ஆத்திசூடி , பொன் வால் நரி ஆறில் ஒரு பங்கு வகித்த பதவி : கவிஞர் , எழுத்தாளர் , விடுதலை போராட்ட வீரர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி , ஒரு கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாசிரியர் , விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார் . இவரைப் பாரதியார் என...