இடுகைகள்

சமூக சிந்தனைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!

படம்
 ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!  நம் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர், ஏவுகனை நாயகன் அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத்தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், “மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவுகூர்ந்தால், அதுதான் பெருமை தரக் கூடிய தருணம்” என்றார். சிறப்பான சில ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் இங்கே. ஆசிரியர் என்பவர் கடினமான விஷயங்களை எளிதாக்கக்கூடிய ஒரு நபர்.  ரால்ப் எமர்சன்  யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார்.   கதே  தாயின் முகம் தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம்.    காந்தியடிகள்  இயற்கை தான் மிகச் சிறந்த ஆசிரியர்.    கார்லைல்  கல்விக்கூடம் ஒரு தோட்டம். மாணவர்கள் செடிகள். ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.    ஜிக்ஜேக்ளர்  நீங்கள் மற்றவர்களுக்கு கற்பிக்கும் போது வேகமாகவும் சிறப்பாகவும் கற்றுக்கொள்கிறீர்கள்.  ரோசா லக்சம்பர்க்  ஒரு ஆசிரியர், நேர்மையானவர் என்றால், எப்போதும் கவனமுள்ள மாணவராக இருக்க வேண்டும்.  கார்க்கி எம்.  நான் உ...

ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி - 75வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)

படம்
  1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து,  நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே. இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர்.  சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் ...

சாக்ரடீஸ் (SOCRATES)

படம்
  பெயர் : சாக்ரடீஸ் பிறப்பு : கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு இடம் : ஏதென்ஸ் வகித்த பதவி : தத்துவஞானி வரலாறு:-தத்துவஞானிகளின் தந்தை!! ⭐இன்று அறிவியல் ஞானத்தால் வளர்ச்சி அடைந்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒளிமயமான உலகம், ஒரு காலத்தில் அனைத்தும் இருந்தும் அறியாமை என்னும் இருட்டுக்குள் மூழ்கிக்கிடந்தது. ⭐அந்த அறியாமை இருட்டை, கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து, கேள்வி என்ற ஒரு மந்திர சொல்லுக்கு புது முகவரி அமைத்தார் ஒரு சரித்திர நாயகன். ⭐அறிவை தெளிவாக்குகின்ற, வளர்க்கின்ற ஆதார சக்தியான தத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர். ⭐நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர். ⭐வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் கொண்டிருந்தவர். அவர்தான் தத்துவஞானி சாக்ரடீஸ். ⭐மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது.  ⭐வரலாற்றின் பல்வேறு காலக்கட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். ⭐உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தத்த...

மடையன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

படம்
இனி யாரையாவது மடையா என்று திட்டும் முன் யோசிக்க வேண்டியது தான் … ..!   யார் மடையர்கள் ?   ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் “ மடை ”   மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன .   வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும் .     அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து , அதன் உள் ஓட்டையில் கோரை , நாணல் , களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள் .     இதுதான் ஆரம்பகால மடை . பிற்காலங்களில் பாறைகள் , மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது .   வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள் .   மடையைத் திறப்பது சாதாரண விஷயமில்லை . உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும் . மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி , கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன் , ஒரே ஒருவர் மட...

வாழ்க்கை என்பது என்ன?

படம்
  இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் .   வாழ்க்கை என்பது என்ன ?   - உயிரோடு இருப்பதா ?   - மகிழ்ச்சியாக இருப்பதா ?   - பணம் , புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா ?   - தோல்விகளில் கற்றுக் கொள்வதா ?   - வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா ?   - தன்னலமற்ற அர்ப்பணிப்பா ?   - தத்துவங்களின் அணிவகுப்பா ?     … . இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் , பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . வாழ்க்கை என்பது ஓர் அனுபவம் . ஆளுக்கு ஆள் மாறுபடும் .   சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது . காயப்படுத்துகிறது , சிரிக்க வைக்கிறது , அழவைக்கிறது .   முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது .   சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை .   மேலும் , மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான் .   இறைவனால் இவ்வு...

ஆடி18 பெருக்கு என்றால் என்ன ?

படம்
  எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும்   பெருகும் என்பது ஐதீகம் . நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள் , உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் நதி   அன்னைக்கு , ஆடிப்   பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள் .   நம் ஹிந்து மதம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம் தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது . குறிப்பாக அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது , பூச்சொரிதல் , காவடி எடுப்பது , கூழ் ஊற்றுவது , கஞ்சி ஊற்றுவது , செடல் உற்சவம் என ஆடி மாத விசேஷங்களே தனி விழா தான் .   ஒருபுறம் ஸ்ரீ துர்க்கை அம்மன் , ஸ்ரீ காளியம்மன் , ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ நாகாத்தம்மன் , ஸ்ரீ வேம்புலியம்மன் , ஸ்ரீ பச்சையம்மன் என அம்மன் கோயில் திருவிழாக்கள் இருக்கும் .   ஆடி மாதத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு ஆடி மாதம் 18 ம் நாள் , ஆடிப்பெருக்க...