இடுகைகள்

உலக நடப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி: ஒரு பொருளாதார அறிஞரின் அரசியல் எழுச்சியும் வீழ்ச்சியும்

படம்
  அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார், ஆனால் மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை என்று கூறிய அவர் தலிபான்கள் வென்று விட்டனர் என்று கூறி உள்ளார். ஆஃப்கானிஸ்தானில் அரசுப்படைகள் மற்றும் தாலிபான்களுக்கிடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர், அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார், ஆனால் மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை என்று கூறிய அவர் தலிபான்கள் வென்று விட்டனர் என்று கூறி உள்ளார். தோல்வியடைந்த நாடு என்ற வரிசையில் ஆப்கானிஸ்தான் இருக்கும் போது 2014-ல் அஷ்ரப் கனி ஆப்கானை மறுகட்டுமானம் செய்ய அதிபராக்கப்பட்டார். ஆனால் இவரால் தலிபான்களையும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழலையும் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்பு ஆப்கான் படைகளை ஓட ஓட விரட்டிய தலிபான்கள் இப்போது ஆப்கானிஸ்தானத்தையே கைப்பற்றினர். இது தொடர்பாக அஷ்ரப் கனி கூறும்போது, “தங்களது வாள் மற்றும் துப்பாக்கிகளின் தீர்ப்பில் தலிபான்கள் வெற்றி கண்டனர். இப்போது இவர்கள் நாட்டு மக்களின் கவுரவம், சொத்த...

ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன?.. சொந்த நாட்டினரை தாயகம் அழைத்துச் செல்ல உலக நாடுகள் தீவிரம்

படம்
  காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, அங்கு தலிபான்கள் அட்டூழியம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. நாட்டின் மூன்றில் 2 பங்கு தலிபான்கள் வசமாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தாலிபான்கள் தலைநகரை சுற்றிவளைத்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையையொட்டிய பக்திகா மாகாணத்தின் தலைநகரை நேற்று கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? தற்போது தலைநகர் காபூலில் புறநகர் பகுதிகளில் தாலிபான் படைகள் முகாமிட்டுள்ளனர். ஆட்சியை ஒப்படைத்தால் காபூலில் தாக்குதல் நடத்தப்படாது என்று அரசுக்கு தாலிபான்கள் நிபந்தனை விதித்தன. ஆப்கான் அதிபர் மாளிகையில் அரசு தரப்புடன் தாலிபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. அஷ்ரப் கானி பதவி விலக மறுத்தால் சுட்டுக்கொல்லப்படலாம் என்று அவரது முன்னாள் ஆலோசகர் அச்சம் தெரிவித்துள்ளார். தாலிபான்கள் இறுதி எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் அரசு படைகள் நிபந்தனையின்றி சரணடையுமாறு தாலிபான்க...

தாலிபன்கள் யார்? ஆப்கனில் இவர்கள் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி?

படம்
  ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்கள், தலைநகர் காபூலில் அமைதி வழியில் ஆட்சியை அரசாங்கம் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் முன்னோட்டமாக, தலைநகர் காபூலுக்கு வெளியே ஆயதங்களுடன் தமது போராளிகளை காத்திருக்குமாறு தாலிபன் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட எந்த நேரத்திலும் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ளும் நிலையில் இருப்பது உறுதியாகி விட்டது. ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான நடைமுறைக்கு அரசு தயாராகி வருவதாக ஆப்கன் உள்துறை அமைச்சர் உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றி பேசியிருக்கிறார். இந்த அளவுக்கு அரசாங்கத்தை அடிபணிய வைக்கும் நிலைக்கு தள்ளுவதற்கு தாலிபன்களால் எவ்வாறு முடிந்தது? 2001ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரால் ஆஃப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் அகற்றப்பட்டனர். பின்னர் அந்த நாட்டில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தாலிபன்களும் அமெரிக்காவும் நடத...

அமெரிக்காவில்..உலகின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக.. 11 வயது இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு!

படம்
  வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுமியான 11 வயது நடாஷா பெரி உலகின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடாஷா பெரி நியூ ஜெர்சியில் உள்ள தெல்மா எல் சாண்ட்மியர் தொடக்கப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம் உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த மாணவர்களை அடையாளம் காணவும், அவர்களின் கல்வித் திறன்களைப் பற்றிய தெளிவான விவரங்களை வழங்கவும் திறமை தேடல் சோதனை தேர்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் மதிப்பீட்டு சோதனை (SAT) மற்றும் அமெரிக்கன் கல்லூரி சோதனை (ACT) ஆகிய சோதனைகள் திறமையான இளைஞர் திறமைக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் (CTY) தேடலின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டன இந்த திறமை தேடல் சோதனை தேர்வில் பங்கேற்ற 84 நாடுகளைச் சேர்ந்த சுமார் 19,000 மாணவர்களில் 11 வயது சிறுமி நடாஷா பெரியும் ஒருவர். நடாஷா பெரியின் செயல்திறன் வாய்மொழி மற்றும் அளவு பிரிவுகளில் மேம்பட்ட தரம் 8 செயல்திறனின் 90 வது சதவிகிதத்துடன் சமன் செய்யப்பட்டது என்று திறமையான இளைஞர் திறமைக்கான ஜான்ஸ் ...

27 ஆண்டுகால திருமணத்தை முறித்து கொண்ட பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் தம்பதி!

படம்
  வாஷிங்டன் : மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதி 27 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து மூலம் தங்களது திருமண உறவை முறித்து கொண்டனர் . இதை நீதிமன்றமும் உறுதி செய்தது .   அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனருமான பில்கேட்ஸ் . இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் . இந்த தம்பதிக்கு 27 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது . கடந்த 1975 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை பில்கேட்ஸ் தொடங்கினார் . அப்போது அதன் சிஇஓவாக செயல்பட்டார் .   Bill Gates and Melinda Gates divorced after 27 years அந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவை சந்தித்த அவர் காதலித்து அவரை ஹவாய் தீவுகளில் திருமணம் செய்து கொண்டார் . பின்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு மெலிண்டா பெயரில் அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வந்தார் . இதன் மூலம் கல்வி , சுகாதாரம் ஆகிய பணிகல் மேற்கொள்ளப்பட்டன . இந்த நிலையில் இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர் .   இதுகுறித்து கடந்த மே மாதம் அற...