இடுகைகள்

தமிழ்மொழி தொண்டர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மு. வரதராசனார் (M.VARATHARASANAR)

படம்
  பெயர் : மு. வரதராசனார் இயற்பெயர் : மு. வ. பிறப்பு : 25-04-1912 இறப்பு : 10-10-1974 பெற்றோர் : முனுசாமி முதலியார், அம்மாக்கண்ணு இடம் : வேலூர் வகித்த பதவி : தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் விருதுகள் : சாகித்திய அகாதமி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். வாழ்க்கைச் சுருக்கம்: மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. மு.வ. வின் கல்வி,வ...

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (SATHAVATHANI SEYGUTHAMBI PAVALAR)

படம்
  பெயர் : சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறப்பு : 31-07-1874 இறப்பு : 13-02-1950 பெற்றோர் : பக்கீர் மீரான் சாகிபு , அமீனா அம்மையார் இடம் : நாகர்கோவில் , தமிழ்நாடு வகித்த பதவி : தமிழ் புலவர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழ்ப் பெரும் புலவர் . சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர் . கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ் , அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் , சில நாடக நூல்களையும் எழுதியவர் . கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னு கலையில் சிறந்து விளங்கியவர் .   இளமைப் பருவம்   நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31 இல் பிறந்தார் .   அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன . பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் ...

குன்றக்குடி அடிகளார் (KUNDRAKUDI ADIKALAAR)

படம்
  பெயர் : குன்றக்குடி அடிகளார் இயற்பெயர் : அரங்கநாதன் பிறப்பு : 11-07-1925 இறப்பு : 15-04-1995 பெற்றோர் : சீனிவாசப் பிள்ளை , சொர்ணத்தம்மாள் இடம் : தஞ்சை , தமிழ்நாடு புத்தகங்கள் : ஆலய சமுதாய மையங்கள் வகித்த பதவி : இலக்கியவாதி     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   ‘ அடிகளார் ’ என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல் . எனினும் , அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனி வரலாறு .   தமிழகத்துத் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு , 1925 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பிறந்தார் . இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன் . அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர் ; சகோதரி ஒருவர் . பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன் , தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944 ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தான் . 1945 - 48 கால...

சுப்ரமணிய பாரதியார் (SUBRAMANIA BHARATHIAR)

படம்
  பெயர் : சுப்ரமணிய பாரதியார் இயற்பெயர் : சுப்பிரமணியன் , சுப்பையா பிறப்பு : 11-12-1882 இறப்பு : 12-09-1921 பெற்றோர் : சின்னசாமி ஐயர் , இலக்குமி அம்மாள் இடம் : எட்டயபுரம் , தூத்துக்குடி , தமிழ்நாடு புத்தகங்கள் : குயில் பாட்டு , கண்ணன் பாட்டு , சுயசரிதை ( பாரதியார் ), தேசிய கீதங்கள் , பாரதி அறுபத்தாறு , ஞானப் பாடல்கள் , தோத்திரப் பாடல்கள் , விடுதலைப் பாடல்கள் , விநாயகர் நான்மணிமாலை , பாரதியார் பகவத் கீதை ( பேருரை ), பதஞ்சலியோக சூத்திரம் , நவதந்திரக்கதைகள் , உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கம் , ஹிந்து தர்மம் ( காந்தி உபதேசங்கள் ), சின்னஞ்சிறு கிளியே , ஞான ரதம் , பகவத் கீதை , சந்திரிகையின் கதை , பாஞ்சாலி சபதம் , புதிய ஆத்திசூடி , பொன் வால் நரி ஆறில் ஒரு பங்கு வகித்த பதவி : கவிஞர் , எழுத்தாளர் , விடுதலை போராட்ட வீரர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி , ஒரு கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாசிரியர் , விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார் . இவரைப் பாரதியார் என...