இடுகைகள்

Indian Achievers லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுனில் பார்தி மிட்டல்

படம்
பெயர் : சுனில் பார்தி மிட்டல் பிறப்பு : 23-10-1957 இடம் : பஞ்சாப் வகித்த பதவி : Airtel நிறுவனர் வரலாறு:-Airtel அறிமுகம்..!! 👉ஆரம்ப காலக்கட்டத்தில் மொபைல்போனை காண்பதே அரிது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் மொபைல்போன் இல்லாத கைகளே இல்லை என்று கூறலாம். 👉தற்சமயம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபாரமாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவுதான் மொபைல்போன்களில் இன்டர்நெட் கனெக்ஷன். 👉2G-ல் ஆரம்பித்த இந்த வளர்ச்சி இன்று 4G வரையிலும் வளர்ச்சியடைந்து உள்ளது. இதன்மூலம் உலகத்தையே மொபைல்போனில் அடக்கிவிட்டனர். 👉4Gஐ முதலில் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய நிறுவனம் 'AIRTEL'. இதன்மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்தது. 👉தகவல் தொழில்நுட்பத்தில் இன்டர்நெட் முதல் DTH வரை தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது இந்த நிறுவனம். 👉சைக்கில் உதிரிபாகங்களை விற்க ஆரம்பித்த ஒருவர் தற்போது உலகத்தில் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கான ஏர்டெல்லை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவருக்கு கீழ் கிட்டத்தட்ட 20000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். 👉கையில் ஒன்றுமே இல்லாமல் தந்தையிடம் இருந்து வாங்கிய 15,...

சுனிதி சாலமன்

படம்
பெயர் : சுனிதி சாலமன் பிறப்பு : 14-10-1939 இறப்பு : 28-07-2015 இடம் : சென்னை, தமிழ்நாடு வகித்த பதவி : மருத்துவர் விருதுகள் : தேசிய பெண்கள் உயிரியல் அறிவியலாளர் விருது,பத்மஶ்ரீ,அன்னை தெரசா நினைவுவிருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு சுனிதி சாலமன் என்பவர் ஒரு மருத்துவராவார். இவர்தான் இந்தியாவின், தமிழகத்தின் சென்னையில் 1986 முதன் முதலில் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதை கண்டறிந்தவர் ஆவார். இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் பேராசிரியராக அப்போது இருந்தார். பணிகள்: இவர் எயிட்ஸ் நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் தன்னார்வ ஆலோசனை மற்றும் சோதனை மையத்தை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1993இல் நிறுவினார். 1993இல் தன் வேலையை விட்டு விலகி எயிட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிக்கும் ஒயி.ஆர்.ஜி. கேர் தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். எயிட்ஸ் நோயிக்கு எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க மறுத்த அந்தக் காலகட்டத்தில் குறைந்த வசதிகளுடன் சென்னை பாண்டி பசார் பகுதியில் கூடாரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கத் துவங்கினார். விருதுகள்: இவரது பணிகளை பாராட்டும் விதமாக 2009ஆம் ஆண்டு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொ...

பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால்

படம்
பெயர் : பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் இடம் : சண்டிகார் வகித்த பதவி : Flipkart நிறுவனர் வரலாறு:-Flipkart 👉உலகமே இன்று இணையத்தில்தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய சூழலில் இணையம் இன்றி எதுவும் எல்லை என்றாகிவிட்டது 👉முன்பெல்லாம் கடைக்கு சென்று, கூட்ட நெரிசலில் ஆடைகளையும் மற்ற பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்குவர். ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும் எல்லாப் பொருட்களும் வீடு வந்து சேரும் 👉இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியே. இன்று ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும் எல்லாம் நம் வசம் என்றாகிவிட்டது. இதில் ஒன்றுதான் ஆன்லைன் ஷாப்பிங். பெரும்பாலானோர் ஆன்லைனில் புக் செய்து தான் அதிகமாக பொருட்களை வாங்குகின்றன 👉தற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகங்கள் கொடிகட்டி பறக்கின்றன. ஒரு பொருளை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி அழைந்த காலமெல்லாம் இப்போது இல்லை. மொபைலில் வீட்டில் உட்கார்ந்தபடியே வேண்டிய பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கிவிடுகிறோம் 👉அப்படி ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு கம்பெனி தான...

இசைஞானி இளையராஜா

படம்
பெயர் : இசைஞானி இளையராஜா இயற்பெயர் : ராசய்யா பிறப்பு : 02-06-1943 பெற்றோர் : ராமசாமி, சின்னத்தாயம்மாள் இடம் : பண்ணைப்புரம், தேனி வகித்த பதவி : இசையமைப்பாளர் விருதுகள் : லதா மங்கேஷ்கர் விருது, கலைமாமணி, பத்ம பூஷன் வரலாறு:-வாழ்க்கை வரலாறு தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். 1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள். இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தம...

வி. சாந்தா (V.SANTHA)

படம்
பெயர் : வி. சாந்தா பிறப்பு : 11-03-1927 இடம் : மயிலாப்பூர், சென்னை புத்தகங்கள் : My Journey, Memories, V Shanta வகித்த பதவி : புற்றுநோய் மருத்துவர் விருதுகள் : பத்ம விபூஷன்,பத்மஶ்ரீ,பத்ம பூஷன்,மக்சேசே விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு மருத்துவர் வி. சாந்தா இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இளமை வாழ்க்கை: சென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர் சாந்தா, பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார். இவர் மக்சேசே விருது, பத்மஶ்ரீ, பத்ம விபூஷண்,பத்ம பூஷண், நாயுடம்மா நினைவு விருது (2010), தமிழக அரசின் ஔவையார் விருது (2013) போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்....

சிவசங்கர நாராயண பிள்ளை (Sivasankara Narayana Pillai)

படம்
  பெயர் : சிவசங்கர நாராயண பிள்ளை இயற்பெயர் : எஸ்.எஸ். பிள்ளை பிறப்பு : 05-04-1907 இறப்பு : 31-08-1950 இடம் : செங்கோட்டை, தமிழ்நாடு வகித்த பதவி : கணித மேதை, பேராசிரியர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள் தொடக்க கல்வியை இலத்தூரில் கற்றார். அப்போது அவருடைய ஆசிரியர் சாஸ்தியார், அவருடைய கணிதத் திறமையைப் பார்த்து, அதிசயத்தார். திடீரென அவருடைய தந்தை இறந்ததும் அவர் பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். ஆனால், ஆசிரியர் சாஸ்திரியார் அவரை அணுகித் தொடர்ந்து படிக்க வற்புறுத்தியது மட்டுமல்லாமல், வறுமையிலிருந்த சாஸ்திரியாரே தனது சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை அவரின் கல்விக்காகச் செலவழித்து வந்தார். சாஸ்திரியாரின் கனவு வீண் போகாமல் தொடர்ந்து செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் எஸ்.எஸ். பிள்ளை வெற்றியடைந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில், இன்டர் மீடியட் முடித்து, பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் கணிதத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். 1929ஆம் ஆண்டு, ...

அசிம் பிரேம்ஜி (Azim Premji)

படம்
  பெயர் : அசிம் பிரேம்ஜி பிறப்பு : 24-07-1945 இடம் : குஜராத் வகித்த பதவி : Wipro நிறுவனர் வரலாறு:-அசிம் பிரேம்ஜி..!! 👉ஐ.டி துறையில் பல நிறுவனங்கள் கால் பதித்திருந்தாலும் அதில் மிகவும் பிரபலமடைந்த பெயர் பெற்ற நிறுவனங்கள் வெகு சிலவே. 👉அவ்வாறு கால் பதித்த நிறுவனங்களில் இந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தை பற்றிதான் இனிவரும் பகுதியில் பார்க்க உள்ளோம். முதலில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனமாக இருந்து தற்போது ஐ.டி நிறுவனங்களில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கிறது இந்த நிறுவனம். 👉தற்போதைய சூழலில் 50 வயது வரை வாழ்வதே போராட்டமாக இருக்கும்போது, ஒரு நிறுவனத்தை 50 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அது எந்த நிறுவனம் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா? 👉விப்ரோ நிறுவனத்தை பற்றியும், விப்ரோ நிறுவனத்தின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவரை பற்றியும்தான் இனி பார்க்க போகிறோம். 👉விப்ரோ நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனம் விப்ரோ, பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்தி...

க. சீ. கிருட்டிணன்

படம்
  பெயர் : க . சீ . கிருட்டிணன் பிறப்பு : 04-12-1898 இறப்பு : 14-06-1961 பெற்றோர் : கரியமாணிக்கம் சீனிவாசம் இடம் : விருதுநகர் , தமிழ்நாடு , இந்தியா புத்தகங்கள் : நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்டவிதம் , பூமியின் வயது என்ன , சூரிய சக்தி , உலக புரட்சியாளர் ஐன்ஸ்டைன் வகித்த பதவி : இயற்பியலாளர் விருதுகள் : பத்ம பூஷன் , ராயல் சொசைட்டி ஃவெல்லோ (FRS), செவீரன் (Knighthood)     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   இவர் ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார் . ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர் . சி . வி . இராமன் உடன் இணைந்து இவரும் இக்கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார் . ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927- ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘ நேச்சர் ’ (Nature) என்ற இதழில் ( சுமார் 20 கட்டுரைகள் ) எழுதியுள்ளார் . காந்தப் படிகங்கள் பற்றியும் , சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான க...

கண்ணன் சௌந்தரராஜன் (Kannan Shoundarajan)

படம்
  பெயர் : கண்ணன் சௌந்தரராஜன் பிறப்பு : 27-12-1973 இடம் : சென்னை , இந்தியா வகித்த பதவி : கணிதவியலாளர் விருதுகள் : சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   கண்ணன் சௌந்தரராஜன் ஒரு கணிதவியலாளர் , ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் . 2006 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் செல்லும் முன் அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தார் . அவர் தனது இளங்கலைப் படிப்பை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முடித்தார் . அவரது முக்கிய ஆராய்ச்சியான படிக உருநிறை எல் செயல்பாடுகள் குறிப்பாக ‘ பகுப்பாய்வு எண் கோட்பாடு ’ மற்றும் ‘ பெருக்கல் எண் கோட்பாடு ’ துணைத்துறைகள் ஆகும் .   தமிழ்நாட்டில் கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தாரால் , ஒவ்வொரு ஆண்டும் சீனிவாச இராமானுஜன் ஆர்வம் கொண்ட துறைகளில் சாதனை புரிந்த இளம் கணிதவியலாளர் ஒருவருக்கு வழங்கப்படும் சாஸ்த்ரா இராமானுஜன் பரிசை கண்ணன் சௌந்தரராஜன் அவர்கள் பெற்றுள்ளார் . மேலும் இவர் , ஆஸ்டுரோவ்சுகி பரிசு , இன...

ஏ. ஆர். ரகுமான் (A.R.Rahuman)

படம்
  பெயர் : ஏ . ஆர் . ரகுமான் இயற்பெயர் : ஏ . சே . திலீப்குமார் பிறப்பு : 06-01-1966 பெற்றோர் : சேகர் இடம் : சென்னை , தமிழ்நாடு வகித்த பதவி : இசையமைப்பாளர் விருதுகள் : ஆஸ்கார் விருது , பத்ம பூஷன் , பத்மஶ்ரீ விருது , லாரன்ஸ் ஆலிவர் விருது , கோல்டன் குளோப் , கிராமிய விருது , இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   ‘ இசைப்புயல் ’ என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ . ஆர் . ரகுமான் , தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் . 2009 ஆம் ஆண்டு , இவர் இசையமைத்த ‘ ஸ்லம் டாக் மில்லியனர் ’ என்ற இந்தி திரைப்படத்திற்காக , இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியவர் இசைப்புயல் ஏ . ஆர் . ரகுமான் .   பிறப்பு :   தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் , 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் . இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும் . இவருடைய தந்தை பெயர் சேக...