பேருந்துகளில் பயணிக்கும் போலீஸார் கட்டாயம் டிக்கெட் எடுக்கவேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு*

அரசுப் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணிக்கும் போலீஸார் டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தில் சீருடை அணியாமல் பயணம் செய்த காவலர் டிக்கெட் எடுக்காமல் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் நடத்துனர் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடத்துனருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

சிகிச்சை பலனளிக்காமல் நடத்துனர் உயிரிழந்ததால் விவகாரம் பெரிதானது.

மனிதம் உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பொதுவாக காவலர்கள் அரசுப்பேருந்தில் பணி நிமித்தமாக பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு பதில் வாரண்ட் உள்ளது என்று சொன்னால் அதை நடத்துனர் கணக்கில் எடுத்துக்கொள்வார். பின்னர் காவல்துறைக்கு அனுப்பப்படும் மொத்த ரசீது மூலம் பணம் வசூலிக்கப்படும்.

இதில் போலீஸார் சொந்த வேலையாக செல்லும்போதும், சீருடை அணியாமல் செல்லும் போதும் நடத்துனர்களிடம் போலீஸ் எனக்கூறுவார்கள். நடத்துனரும் கண்டுக்கொள்ள மாட்டார். அன்றும் அதுபோல் நடக்கும் என காவலர் நினைக்க வாக்குவாதம் முற்றியுள்ளது. வாரண்டும் இல்லாமல், சூருடையுடனும் இல்லாமல் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் பேருந்தின் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்ததே நடத்துனருக்கு மாரடைப்பு வரவும் உயிரிழக்கவும் காரணமாக அமைந்தது.

இதன் அடிப்படியில் மனித உரிமை ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. கடந்த மார்ச் மாதம் மனித உரிமை ஆணையம் அளித்த உத்தரவு அடிப்படையில் அரசு உத்தரவின்பேரில் உள்துறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி அனைத்து பிரிவு காவலர்களுக்கும் பொதுவாக ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி “இனி வரும் காலங்களில் மேற்கண்ட மோதல் போக்குச் சம்பவம் போல் நிகழாமல் இருக்க அரசுப்பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் போலீஸார் முறைப்படி டிக்கெட் எடுக்கவேண்டும்.

மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைபிடிப்பதை அந்தந்த துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும்”.

என உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021