க. சீ. கிருட்டிணன்
பெயர் :
க. சீ. கிருட்டிணன்
பிறப்பு
: 04-12-1898
இறப்பு
: 14-06-1961
பெற்றோர்
: கரியமாணிக்கம் சீனிவாசம்
இடம் : விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
புத்தகங்கள்
: நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்டவிதம், பூமியின் வயது என்ன,
சூரிய சக்தி, உலக புரட்சியாளர்
ஐன்ஸ்டைன்
வகித்த பதவி : இயற்பியலாளர்
விருதுகள்
: பத்ம பூஷன்,
ராயல் சொசைட்டி ஃவெல்லோ(FRS),
செவீரன்(Knighthood)
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
இவர் ஒரு புகழ்பெற்ற இந்திய
இயற்பியலாளர் ஆவார். ஒளிச்சிதறல் விளைவுகளில்
இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல்
பரிசு பெற்ற சர். சி.
வி. இராமன் உடன் இணைந்து
இவரும் இக்கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார். ராமன்
விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம்
ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல்
சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற
இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் பற்றியும்,
சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும்
ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.
அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில்
உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற
பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.
வாழ்க்கைக்
குறிப்பு :
கரியமாணிக்கம்
சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எஸ்.
கிருட்டிணன் (K. S.
Krishnan) அல்லது கே.எஸ்.கே
(KSK) என்றே அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர்
மாவட்டத்தில் வத்திராயிருப்பு (Watrap) அருகில் அமைந்துள்ள விழுப்பனூர்
என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத்
தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும்
ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன்,
திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி. எஸ்.
இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
இவர்
1940 இல் பிரித்தானியாவில் உள்ள ராயல் சொசைட்டியின்
ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். 1946 இல்
செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். 1954 ஆம் ஆண்டும் இந்தியாவின்
பத்ம பூஷண் விருது பெற்றார்.
1961 இல் ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி
ஸ்வருப் பட்நாகர் நினைவுப் பரிசு
பெற்றார்.
இவரை பெருமைப்படுத்தும் விதமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின்
அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு,
அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை
நிறுவப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு
சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக