வெள்ளரி (Cucumber)
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச் சுருக்கங்கள் மறையும்.
வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவ வேண்டும்.
வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசிய பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.
கண்ணுக்கு கீழே உள்ள கருப்பு வளையத்தை நீக்க, வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.
வெள்ளரிக்காய்
குறைவான கலோரி அளவைக் கொண்டுள்ளது.
வெள்ளரிக்காய்,குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்
தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது.
வெள்ளரியில் உள்ள நீர் சத்து
நாக்கு வறட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும்.
சிறுநீர்ப்
பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில்
ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது. இக்காய் பித்தநீர், சிறுநீரகம்
ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குகிறது.
வெள்ளரிக்காய்
கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்கிறது. 100 கிராம்
வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது.
சாதாரணமாக
வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். இளநீரைப் போன்றே
ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு
திகழ்கிறது. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு
அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு
அருந்தினால் வயிற்றுப்புண் குணமாகும்.
காலராநோயாளிகள்
வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து,
ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம்
அருந்த வேண்டும். வறண்ட தோல், காய்ந்து
விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய்
சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு
சாப்பிட்டு வந்தால் வறட்சித் தன்மையை
போகும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும்
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலுக்காகச்
சிலர் ஏதாவது ஒரு பழம்
சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச்
சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன்
சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்.
வெள்ளரியில்
தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம்,
இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும்
குளோரின் இதில் உண்டு .இரத்ததில்
சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம்
அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல்
சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக