மரிய இருதயம் - கேரம் விளையாட்டு வீரர் (Mariya Irudayam)
பெயர் : மரிய இருதயம்
பிறப்பு : கி.பி.1956
பெற்றோர் : அந்தோணி சைமன்,ஆரோக்கியமேரி
இடம் : சென்னை, தமிழ்நாடு
வகித்த பதவி : கேரம் விளையாட்டு வீரர்
விருதுகள் : அர்ஜுனா விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
மரிய இருதயம் இந்திய கேரம் விளையாட்டு வீரர் ஆவார். 1956-ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் 2 முறை உலக கேரம் விளையாட்டு போட்டியிலும், 9 முறை தேசிய கேரம் விளையாட்டுப் போட்டியிலும் வெற்றியாளராக வாகை சூடியவர். கேரம் விளையாட்டில் இவரது பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு 1997-ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கான மிக உயரிய விருதான அர்ஜுனா விருதை வழங்கியுள்ளது. 2014-ம் ஆண்டு வரையிலான இந்திய வரலாற்றில், கேரம் விளையாட்டுக்காக அர்ஜுனா விருதைப் பெற்ற ஒரே விளையாட்டு வீரர்.
வாழ்க்கைச் சுருக்கம் :
இவர் கேரம் விளையாடத் தொடங்கிய இரண்டாவது ஆண்டில், பள்ளி மாணவர்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான பத்திரிக்கையாளர் சங்க விருது கிடைத்தது. 1991ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற உலக வாகையர் போட்டியில் முதல் முறையாக வாகையர் பட்டம் வென்றார். 1992இல் உலக வாகையர் பட்டம் வென்றதற்காகக் குருநாதன் டிராபி வழங்கி கௌரவித்தது பத்திரிக்கையாளர் சங்கம். 1995ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது முறையாக அப்பட்டத்தை வென்றார். சார்க் வாகையர் பட்டப் போட்டியில் கோப்பையை வென்றார். 9 முறை தேசிய வாகையர் பட்டத்தை வென்றார். பிரெஞ்சு ஓபன் பட்டம், கேரம் சம்மேளனம் துவக்கப்பட்டு 10ஆம் நிறைவையொட்டி கனடாவில் நடத்தப்பட்ட போட்டியில் வாகையர் பட்டம் வென்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக