பூலித்தேவன் (Poolithevan)
பெயர் :
பூலித்தேவன்
இயற்பெயர்
: காத்தப்பப் பூலித்தேவர்
பிறப்பு
: 01-09-1715
இறப்பு
: கி.பி.1767
பெற்றோர்
: சித்திரபுத்திரர், சிவஞான நாச்சியார்
இடம் : நெற்கட்டுஞ்செவ்வல், திருநெல்வேலி, தமிழ்நாடு
வகித்த பதவி : சுதந்திர போராட்ட
வீரர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
மாவீரன்
பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித்
தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத்
தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்!
நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலோச்சிய பாளையக்காரனாவான்.
தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை
நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன் இவன்.
இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே
வெளியேறு’
என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப்
போராளி பூலித்தேவனேயாவான்.
மதுரையில்
நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில்
விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர்
1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார்.
இவருடைய ஆட்சி காலத்தில் தான்
பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு
ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு
அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட
அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு
பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வம்சத்தினர்
மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப்
பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு
ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான்.
திருநெல்வேலிச் சீமையில் தான் பெரும்பாலும்
தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும்
பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும்
அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை
பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது.
ஆனால் அதற்குப் பிறகு வந்த
நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால்
ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த
பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின்
கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.
இத்தகைய
பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய
விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த
பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த
குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள்
பெயர் சித்திர புத்திரத் தேவரும்
சிவஞான நாச்சியாரும் ஆவர்.
1-9-1715 ல்
மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், ‘காத்தப்ப பூலித்தேவர்’ என்பதாகும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர். பூலித்தேவர்
பிறந்த பொழுது அந்த பகுதி
மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு
காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத்
தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல
முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது
மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு
பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.
சித்திரபுத்திரத்
தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத
அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள்
போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு
இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான்
பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய
வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.
மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில்
இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும்
பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட
வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில்
இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக
இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான
கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப்
பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும்
அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத்
திகழ வேண்டும் என்ற உறுதி
பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச்
சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க
நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற
தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும்
கற்று, தாமே கவிதை எழுதும்
அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு
பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப்
போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை
ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம்,
வாள் வீச்சு, வேல் எய்தல்,
அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள்,
கவண் எறிதல், வல்லயம் எறிதல்
மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல்
போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக்களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேற்கு
தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு
மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை
அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.
இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர்
பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன்
என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது.
அவரைப் பற்றிய ஒரு நாட்டு
பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக்
கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி
உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண்
தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும்,
பவளம் போன்ற உதடுகளும், மார்பும்
இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது .
காத்தப்ப
பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர்
அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல்
அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக்
கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து
அவரை அத்தனை இளம் வயதில்
மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த
முடிவை வரவேற்றார்கள் .
பின்னர்
பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன.
அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர்
அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி
என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி
நல்ல அழகி மட்டுமல்ல, வீர
விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர்.
கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும்
இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட
அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு
கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர
புத்திர தேவன் மற்றும் சிஞானப்
பாண்டியன் என்று மூன்று நன்மக்கள்
பிறந்தனர்.
பூலித்தேவருக்கு
பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச்
சேர்ந்த இலவந்தூர், ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட
எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச்
சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான்
வந்து கால் நடைகளைக் கவர்ந்து
சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன்
மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான
சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப்
பாளையக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.
உடனே
150 வீர்களுடன் புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத்
தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை
கணிசமாக குறைந்து கொண்டே வந்தது.
இதனைக் கண்டு மேலும் பலர்
களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர்
இறுதியில் வெற்றிகரமாக கால்நடைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர்
முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக்
கவர்ந்து செல்வதுதான்.
போரில்
வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை
துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின்
எல்லைக்கருகில் சென்று விட்டதால் எதிரிகளின்
எண்ணிக்கை கூடிவிட்டது.
ஆனாலும்
மனம் தளராது போராடி பல
பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால்
களத்தில் அவர் தன்னுடைய ஒரு
காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர்
போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி
கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக
தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக