ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் 12-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) ஏற்பட்டது. குறிப்பாக நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ‘பி.எஸ்.எல்.வி. சி-51’ ராக்கெட் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதில் பொருத்தப்பட்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த
‘அமேசோனியா’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள்
மற்றும் அதனுடன் 18 செயற்கைகோள்கள் விண்ணில் திட்டமிட்ட இலக்கில்
நிலை நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது நடப்பு ஆண்டுக்கான
2-வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை
விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தயாராகி வருகிறது.
இதுகுறித்து
இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
“இயற்கை
பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர்
எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள்
பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து
268 கிலோ எடை கொண்ட ‘ஈ.ஓ.எஸ்.-03’
என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள்
வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயற்கைகோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில்
பொருத்தப்பட்டு வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை
5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு
மையத்தில் உள்ள 2-வது ஏவதளத்தில்
இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள்
தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது
விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14-வது
ராக்கெட்டாகும்.
விண்ணில்
செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள்
அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைகோளாகும்.
இது பூமியின் மேல்பரப்பில் இருந்து
36 ஆயிரம் கி.மீ. தூரத்தில்
நிலை நிறுத்தப்படுகிறது.
இந்த ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில்
முதல்முறையாக செயற்கைகோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர்
விட்டம் கொண்ட கூம்பு வடிவம்
கொண்ட வெப்பத்தகடு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியான
‘கவுண்ட் டவுன்’ அடுத்த வாரம் தொடங்க
இருக்கிறது.”
இவ்வாறு
இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக