ஆக. 15ல் 'ஓலா' மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!
ஓலா மின்சார ஸ்கூட்டர் வருகிற
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர
தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
பெட்ரோல்,
டீசல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து
சந்தையில் மின்சார வாகனங்களின் தேவை
அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்,
'ஓலா' மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு
குறித்த அறிவிப்பினை ஓலா நிறுவனம் கடந்த
ஆண்டு வெளியிட்டது. மேலும் சார்ஜ் செய்யும்
வசதியுடன் கூடிய ஓலா மின்சார
ஸ்கூட்டர் முன்பதிவுஜூலை 16 ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓலா மின்சார ஸ்கூட்டரை
வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து,ஓலா மின்சார ஸ்கூட்டர்
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர
தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச்
செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால்
தெரிவித்துள்ளார்.
100-150 கிமீ
வகைகளில் ஸ்கூட்டர் கிடைக்கும் என்றும் இதில் லித்தியம்-அயர்ன் பேட்டரி, கிளவுட்
இணைப்பு அல்லாய் வீல்ஸ் உள்ளிட்ட
அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கூட்டர்
அறிமுகமாகும் அன்று வாகனத்தின் முழுமையான
அம்சங்கள் வெளியாகும். எஸ்1 மற்றும் எஸ்1
புரோ என்ற இரு மாடல்களில்
முதலில் அறிமுகமாகவுள்ளது.
ஆண்டுதோறும்
20 லட்சம் மின் இருசக்கர வாகனங்களை
தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக