ஆடி18 பெருக்கு என்றால் என்ன ?
எந்த ஒரு புது மற்றும்
நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த
காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப்
படிகளை அமைத்த நமது முன்னோர்கள்,
உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் நதி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு
அன்று நன்றி செலுத்தும் விதமாக
விழா கொண்டாடினார்கள்.
நம் ஹிந்து மதம் சார்ந்த
அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம் தான்
கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக
அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது, பூச்சொரிதல்,
காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி
ஊற்றுவது, செடல் உற்சவம் என
ஆடி மாத விசேஷங்களே தனி
விழா தான்.
ஒருபுறம்
ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ
காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ
நாகாத்தம்மன், ஸ்ரீ வேம்புலியம்மன், ஸ்ரீ
பச்சையம்மன் என அம்மன் கோயில்
திருவிழாக்கள் இருக்கும்.
ஆடி மாதத்தின்
இன்னொரு
முக்கிய சிறப்பு ஆடி மாதம்
18ம் நாள், ஆடிப்பெருக்கு நாள்.
முன்னாட்களில்
கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும்
மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதை
நீங்க வழிபாடு செய்தது தான்
அம்மன் வழிப்பாடு.
ஊர் வளம் பெறவேண்டி நதிகளை
போற்றுவதுமாக தான் இன்றும் தொடர்கிறது.
முக்கியமாக,
சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி-ஆனி மாதம் வரை
நெல்லோ, தானியங்களோ சேமிப்பில் வைத்திருக்கும் ஏழை மக்கள், ஆடியில்
அது தீர்ந்து உணவுக்கு தடுமாறுவார்கள்.
மழை இன்றி பஞ்சத்தில் இருக்கும்
அவர்கள் ஆடி மாதத்தில் விதைவிதைத்து,
விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி
விளைச்சலுக்கு முக்கிய காரணமான தண்ணீரை
போற்றியும், விளைச்சலுக்கு ஏற்ற மாரி மழை
பொழிய வேண்டும் என்பதற்காகவும் வழிப்படுகிற
விழா ஆடிப் பெருக்கு.
ஆடிப் பெருக்கு நன்னாளில், நதிப்
பெண்ணான காவிரியை வணங்கினால் விவசாயம்
செழிப்பது போல், கன்னிப்பெண்கள் இந்த
நாளில் காவிரி நதிக்கரையில் வழிப்பட்டால்
மனசுக்கு ஏற்ற மன்னவர் வாய்ப்பர்,
சுமங்கலிகள் வழிபட்டால் வம்ச விருத்தி, கணவனின்
ஆயுள் கூடும் என்பதும் ஐதீகம்.
காவிரி நதி ஓடுகிற ஊர்களில்
ஆடிப் பெருக்கு வைபவம் நடக்க
வேண்டும் . அன்னை காவிரி தாய்க்கு
நன்றி தெரிவிக்கும் விதமாக சேலை,
திருமாங்கல்யம், பழங்கள், கருமணி, பூ
வகைகள் , நவதானிய வகைகள் என
சீர்வரிசை பொருட்கள் (பிளாஸ்டிக் இல்லாத) மங்கள பொருட்கள் ஆகியவற்றை
வைத்து காவிரி தாயை வணங்கி,
படைத்த மஞ்சள் சரடை பெரியவர்களிடம்
கொடுத்து, பெண்கள் கழுத்திலும் ஆண்கள்
வலதுகையிலும் கட்டிக்கொள்வார்கள்.
இதனால் வாழ்வில் தொட்டதெல்லாம் வளமாக
அமையும் என்றும்,, காவிரி கரையில் தண்ணீரில்
புரண்டோடுவதுப் போல் நம் வாழ்விலும்
இன்பம் பெருகுமாம்.
ஆடிப்பட்டம்
தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு
செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும்
என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி
வழிபட்டவர்கள் நம் முன்னோர்.
அதற்குரிய
வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று
ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர்.
பூஜை செய்யும் முறை
இந்த ஆடி மாதத்தில் புண்ணிய
நதியாய் திகழும் காவிரி தாய்க்கு பலவகையான
உணவுகளை படைத்து மஞ்சல், காதோலை
கருகுமணி மாலை, வளையல், தேங்காய்,
பழம், பூ, அரிசி வெல்லம்
மற்றும் சுவையான பழங்களும், மஞ்சள்
சரடுகளையும் வைத்து தீபஆராதனை செய்து
காவிரி தாயை மகிழ்விப்பார்கள். பிறகு
பூஜித்த மஞ்சள் சரடை பெண்கள்
தங்கள் கழுத்திலும் ஆண்கள் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள்.
காவிரியை சந்தோஷப்படுத்தினால்
அந்த குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் காவிரி அன்னையாக
இருந்து நம்மை காப்பாள். அத்துடன்
நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
இத்தகைய பல சிறப்புகளை கொண்டது
ஆடி மாதமும் ஆடி பெருக்கு
திருநாளும் ஆகும்.
அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு உயர்ந்த
நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற
பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால்,
புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல்
இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர்.

கருத்துகள்
கருத்துரையிடுக