சுவாமி விவேகானந்தர் (SWAMY VIVEKANANDAR)
பெயர் : சுவாமி விவேகானந்தர்
பிறப்பு : 12-01-1863
பெற்றோர் : விசுவநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி
இடம் : கல்கத்தா
வகித்த பதவி : ஆன்மிகவாதி
வரலாறு:-சுவாமி விவேகானந்தர்..!!
👳 நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் படிக்கும்போது, அந்த தலைவர்கள் அத்தனை பேருக்கும் பின்னணியில் ஒரு உண்மையான உந்து சக்தியாக இருந்தவர் யார் என்றால், அவர் வேறு யாருமில்லை - சுவாமி விவேகானந்தர்தான்.
👳 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த சமய தலைவர்களுள் ஒருவர். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்து சமயத்தை வளர்த்தவர்.
👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் ஸ்ரீ 'ராமகிருஷ்ண மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.
👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் அவதாரமாகத் திகழ்ந்தவர்.
👳 பெரும் சமூக சீர்திருத்தவாதியாகவும், தத்துவவாதியாகவும், சிந்தனையாளராகவும் மற்றும் இந்திய இளைஞர்களுக்கான துடிப்புச் சின்னமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ஆம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
சுவாமி விவேகானந்தரின் குழந்தை பருவம் !!
👳 சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இவரது தந்தை பெயர் விசுவநாத் தத்தா மற்றும் தாயார் பெயர் புவனேஸ்வரி தேவி ஆகும். இவரது தாய்மொழி வங்காளமாகும்.
👳 சுவாமி விவேகானந்தர் மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருப்பார். இவர் சிறுவயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
👳 மேலும் இவர் இசையில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். அதனால் இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இவர் சிறந்த பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
👳 தினசரி விவேகானந்தருக்கு அவரது தாயார் ராமாயண, மகாபாரத கதைகளைச் சொல்வார். இதனால் ராமர் கதாபாத்திரத்தின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார்.
👳 இவர் இளம்வயது முதலே தியானம் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டுவர வேண்டியதாய் இருந்தது. சிறுவயதிலிருந்தே எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் இவருக்கு இருந்தது.
👳 சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தருக்கு துறவிகளின் மீது பெரும் மரியாதை இருந்தது. யார் எதை கேட்டாலும், கேட்ட உடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார்.
👳 இதனால் ஒருமுறை அவரை, தாயார் ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டார். அப்படியிருந்தும் அந்த அறையில் இருந்த பொருட்களையும், தனது உடைகளையும் அறையின் ஜன்னல் வழியாக யாசகம் கேட்போருக்கு வெளியே வீசினார் விவேகானந்தர். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தருக்கு தியாக உணர்வு அதிகம் எனலாம்.
👳 இவர் இளம்வயதில் இருக்கும்போதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடப் பழக்கவழக்கங்களை பற்றி பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார்.
உயர்கல்வி :
👳 சுவாமி விவேகானந்தர், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள (Presidency College) பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். பின் கல்கத்தாவிலுள்ள (Scottish Church College) ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தை படித்தார். மேலும், இவர் மேல்நாட்டு தத்துவங்களையும், தருக்கவியலையும் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார்.
ஆன்மீக ஈடுபாடு :
👳 இச்சமயத்தில் இவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இறைவனை பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும்-ஏற்றத்தாழ்வுகளும் இவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார். இதுவே, அவரை 'கேஷப் சந்திர சென்' தலைமையிலான முக்கிய மத இயக்கமான 'பிரம்ம சமாஜில்' இணைய செய்தது. ஆனால், இம்முயற்சிகள் யாவும் இவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சந்திப்பு :
👳 இந்த சமயத்தில், தஷினேஸ்வர் 'ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை' பற்றி சுவாமி விவேகானந்தருக்கு தெரிய வந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். இவர் பலமுறை கடவுளை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
👳 1881ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர், அவரது நண்பர்களுடன் ராமகிருஷ்ண பரமஹம்சரை பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். விவேகானந்தர், ராமகிருஷ்ணரிடம், 'கடவுளை பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், 'ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கின்றேன்' என்றார். இது சுவாமி விவேகானந்தருக்கு அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது.
👳 எதையும் பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளும் விவேகானந்தரால் முதலில் ராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
👳 பின் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார் விவேகானந்தர். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.
👳 ராமகிருஷ்ணரின் போதனைகள் ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. ராமகிருஷ்ணரின் ஆன்மீக ஈடுபாட்டால், விவேகானந்தரால் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கத்தின் அவசியத்தினை புரிந்து கொள்ள முடிந்தது.
ராமகிருஷ்ணர் மீது கொண்ட பற்று!!
👳 எதையும் முற்றிலும் ஏற்கும் முன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம் சுவாமி விவேகானந்தருக்கு இருந்தது. அதனால், எந்தவொரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணர் அவர்களை தனது குருவாக ஏற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை.
👳 ஒருமுறை ராமகிருஷ்ணர் 'ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக்கொடுக்க வேண்டும்' என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நாணயத்தை மறைத்து வைத்தார்.
👳 வெளியில் சென்ற ராமகிருஷ்ணர், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அதில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார்.
👳 பின்னர், இச்செயல் சுவாமி விவேகானந்தருடையது என்பதையும் அறிந்தார். இந்நிகழ்விற்குப்பின் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார்.
விவேகானந்தர் பெயர் மாற்றம் :
👳 மற்ற சீடர்களை காட்டிலும், வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திரநாத் தத்தா (இயற்பெயர்) என்ற பெயரை 'விவேகானந்தர்' என்று மாற்றி சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார் விவேகானந்தர்.
குருவின் சமரசப் பார்வையும், காளியின் தரிசனமும் :
👳 ஒரு சமயம் குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார். 'நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்' என்றார் விவேகானந்தர்.
👳 'கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்' என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு விட்டு வந்தார்.
👳 அப்போது 'அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?' என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே, 'இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!' என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன் என்றார். மற்றவர்கள் சாப்பிட்டால், தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப்பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது.
சுவாமி விவேகானந்தரின் துறவறம்!!
👳 சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அத்வைத வேதாந்தத்தை கற்றுத் தேர்ந்தார். பின் அவர் தனது அடுத்த நிலை என்ன? என்று யோசித்து, துறவறம் மேற்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தார்.
துறவறத்தின் மீது பற்று :
👳 விவேகானந்தருக்கு துறவறத்தின்; மீது பற்று வந்தது. அதை தன் தாயிடம் தெரிவித்தார். அப்போது அவரின் தாயார் கத்தி ஒன்றை எடுத்துவருமாறு கூறினார். விவேகானந்தரும் கத்தியை எடுத்து வந்தார். ஆனால், அவரது தாயாரோ, 'இன்னும் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான பக்குவம் ஏற்படவில்லை' என கூறிவிட்டார்.
👳 ஒவ்வொருமுறையும் விவேகானந்தர் துறவறம் பற்றி பேச்சு எடுக்கும் போதெல்லாம் கத்தியை எடுத்துவருமாறு அவரின் தாயார் கூறுவார். பிறகு அவருக்கு பக்குவம் வரவில்லை எனக்கூறி நிராகரித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக