மடையன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
இனி யாரையாவது மடையா என்று திட்டும் முன் யோசிக்க வேண்டியது தான்…..!
யார் மடையர்கள் ?
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர்
வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான்
“மடை”
மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள்
பயன்படுத்தப்பட்டன.
வைரம் பாய்ந்த கட்டை என்று
சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால்
உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.
அதனை ஏரியின் அடியாழத்தில்
பதித்து, அதன் உள் ஓட்டையில்
கோரை, நாணல், களிமண் கலந்து
அடைத்துவிடுவார்கள்.
இதுதான் ஆரம்பகால மடை.
பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள்
அமைக்கப்பட்டது.
வெள்ளக்காலங்களில்
மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள்.
மடையைத்
திறப்பது சாதாரண விஷயமில்லை. உயிரைப்
பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச்
செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.
மழையால்
ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை
உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும்
ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள்
குதிப்பார்.
மூச்சடக்கி
நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும்
மடையின் அடைப்பை திறந்துவிடுவார்.
மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும்.
அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும்
கடினம்.
மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது
அரிது. அவர்கள் தம் மனைவி,
பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா
விடை பெற்றுச்செல்வார்கள்.
மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.
இவர்கள்தான் “மடையர்கள்” என அழைக்கப்பட்டார்கள்.
வரலாற்றின்
பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய
குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை.
வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம்
அல்லவா?
எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு
ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?
இனி யாரையாவது மடையா என்று திட்டும்
முன் யோசிக்க வேண்டியது தான்….


கருத்துகள்
கருத்துரையிடுக