சி.எஸ்.செல்லப்பா (C.S.CHELLAPPA)

 



பெயர் : சி.எஸ்.செல்லப்பா

பிறப்பு : 29-09-1912

இறப்பு : 18-12-1998

இடம் : சின்னமனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு

புத்தகங்கள் : வாடி வாசல், ஜீவனாம்சம், சுதந்திர தாகம், எழுத்து இதழ்

வகித்த பதவி : எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், கவிஞர், நாடக ஆசிரியர்

விருதுகள் : சாகித்ய அகாதமி விருது



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


பிறப்பு


சி.சு.செல்லப்பா, ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். ‘எழுத்து ’ என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், ‘சுதந்திர தாகம்’ போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.


இவர் சி.சு.செல்லப்பா, தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார். தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார். மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த ‘எழுத்து’ என்ற இதழைத் தொடங்கினார்.


பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த ‘எழுத்து’ காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது. ‘சுதந்திரச் சங்கு’ இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு ‘மணிக்கொடி’ இதழ் கை கொடுத்தது. ‘சரசாவின் பொம்மை’ என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது. இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021