கே. பி. ஜானகி அம்மாள் (K.P.JANAGIYAMMAL)
பெயர் : கே. பி. ஜானகி அம்மாள்
பிறப்பு : 09-12-1917
இறப்பு : 01-03-1992
பெற்றோர் : பத்மநாபன், லட்சுமி
இடம் : திருநகர், மதுரை
வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீராங்கனை, மேடை நாடக கலைஞர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
கே. பி. ஜானகி அம்மாள் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை, மேடை நாடகக் கலைஞர், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர்.
இவர் 9 டிசம்பர் 1917 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் திருநகர் என்னும் ஊரில் பத்மநாபன் மற்றும் லட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் பழனியப்பா பிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகக் கலைஞரானார். 1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த இவர் மதுரை காங்கிரஸ் கமிட்டியில் அலுவலகப் பொறுப்பாளரானார். பின்னர் அதே ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் பின்னர் கடைசி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார்.
கம்யூனிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு 1940 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1967 ஆம் ஆண்டில் மதுரை கிழக்குத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜானகி அம்மாள் தமிழ்நாட்டின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முதல் தலைவர் ஆவார். 1992 மார்ச் 1 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக