வேலூர் மாவட்டம் (VELLUR DISTRICT)

 


வேலூர் மாவட்டத்தின் சிறப்பு 

          வேலுர் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகளையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களையும் கண்கவர் சுற்றுலாதலங்களையும், பக்தி பரவசமூட்டும் ஆன்மிக திருக்கோயில்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வு மையம் இங்கு உள்ளது. காவலுர், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி, வேலூர் கோட்டை மற்றும் அகழி, வளர்ந்து வரும் வனவிலங்கு சரணாலயமான அமிர்திகாடு ஆகியவை மாவட்டத்தின் சிறப்புகள்.

 

2011 இல் இம்மாவட்டத்தில் 

 

தலைநகரம் வேலூர்மக்கள் தொகை3,928,106கல்விஅறிவு விகிதம் 79.65மூஆண்கள்1,959,676பெண்கள்1,968,430அடர்த்தி1077.கி 

 

வரலாறு

 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும் ஓடுகின்றன. வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி. வடஆற்காடு பிரிக்கப்பட்டு அம்பேத்கார் மாவட்டமாக விளங்கிறது.பின்பு வேலூர் மாவட்டமாக பெயர் மாற்றப்பட்டது. வேலூர் கோட்டை 16ஆம் நு}ற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நு}ற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.

 இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமான (1806) சிப்பாய் கலகத்தின் முதல் பொறி இம்மாவட்டத் தலைநகர் வேலூரில் இருந்து கிளம்பியது. வடாற்காடு-அம்பேத்கர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 1989, செப்டம்பர் 30 முதல் வேலூர் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

அமைவிடம்

 இதன் வடக்கே ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டமும், திருவள்ள வர் மாவட்டத்தின் சிறுபகுதியும்@ தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும்@ மேற்கில் தருமபுரி மற்றும் சித்தூர் (ஆந்திரம்) மாவட்டங்களும்@ கிழக்கில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ள ர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன

 

தொழில்கள்:

 வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில் மற்றும் விவசாயம் முக்கிய அங்கமாகும்.ஆம்பூரிலும், ராணிப்பேட்டையிலும்,வாணியம்பாடியிலும் அதிகளவு ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. ஆம்பூர் பிரியாணி சிறப்பு பெற்றது.ஆற்காடு பிரியாணி சிறப்பு பெற்றது

 

நகர அமைப்பு

 வட்டங்கள் 9

 ஊராட்சி ஒன்றியங்கள் 20

 நகராட்சிகள் 12

 பேரூராட்சிகள் 16

 வருவாய் கோட்டங்கள் 3

 வருவாய் கிராமங்கள் 843

 

சட்டசபைத் தொகுதிகள்-12 : அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு(தனி), வாணியம்பாடி, நாட்ராம் பள்ளி, திருப்பத்தூர், அணைக்கட்டு, வேலூர்

 பாராள மன்றத் தொகுதிகள்-3: வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர்.

 வேலூர் மாவட்டச் சுற்றுலாத் தலங்கள்

 வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர்க் கோட்டை, வேலூர் அரசு அருங்காட்சியகம், அறிவியல் பூங்கா, வைனுபாப்பு விண்வெளி ஆய்வு மையம், அமிர்தி உயிரியல் பூங்கா, மதம் சார்ந்த இடங்களான ஜலகண்டேசுவரர் ஆலயம், ஸ்ரீபுரம் பொற்கோயில், பெரிய மசூதி, செயிண்ட் ஜான் தேவாலயம், ஏலகிரிமலை கோடைவாழிடம் ஆகியன வேலூரிலும் அதைச் சுற்றியுமுள்ள சுற்றுலாத் தலங்களாகும்

 

வேலூர்க் கோட்டை

 16 ஆம் நு}ற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வேலூர்க் கோட்டை வேலூருக்கு இன்றும் அழகும் பெருமையும் சேர்க்கின்றது. சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் கலைநயத்துடன் வேலூரின் மையப்பகுதியில் இக்கோட்டை அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் இத்தரைக் கோட்டைக் கட்டப்படுள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள மதில்கள், அகழி முதலியன கோட்டைக்கு அழகு சேர்க்கின்றன. கோட்டையைச் சுற்றிலும் உள்மதில் சுவர், வெளிமதில் சுவர் என இரண்டு சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. கோட்டையின் தென்பகுதியில் பசுமையான பூங்கா ஒன்று அமைந்துள்ளது. தென்மேற்குப் பகுதியில் எழில்மிக்க தூண்களாலும் சிற்பங்களாலும் ஆக்கப்பட்ட அழகிய மண்டபம் உள்ளது இந்திய விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி இக்கோட்டையில்தான் நடைபெற்றது .இராணுவ நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கோட்டையாக இது காட்சியளிக்கின்றது. கோட்டைக்குள் திப்பு மகால், ஹைதர் மகால், பாஷா மகால், கண்டி மகால், பேகம் மகால் ஆகிய அழகிய அரண்மனைகளும் ஜலகண்டேசுவரர் ஆலயம், தேவாலயம், மசூதி, அரசு அருங்காட்சியகம், பல அரசு அலுவலகங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் உள்ள இக்கோட்டையை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பாதுகாத்துக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர். கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் படகுப் போக்குவரத்தும் நடைபெறுகின்றது

 

ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

 வேலூர்க் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு கொண்டதாகவும் உள்ளது. பிரமிப்பூட்டும் தோற்றத்தில் அழகுடனும் கலை அம்சத்துடனும் உள்ள இக்கோயிலில் கண்கவர் ஓவியங்களும்,சிற்பங்களும் அமையப்பெற்றுள்ளன. ஆண்டு முழுவதும் அனைத்து விழாக்களும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஜலகண்டேஸ்வரருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலின் சிற்பங்கள் மிகவும் திறமையான சிற்பிகளால் வடிக்கப்பட்டுள்ளது. கைவினைஞர்களின் அழகிய கலைவேலைப்பாடுகள் நிறையவே கோயில் முழுவதும் உள்ளது. நுழைவு வாயில் தாழ்வாரச் சிற்பங்கள் சுற்றுலா பயணிகளால் பாராட்டப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் தெய்வச் சிலை இல்லாமல் இருந்து பிறகு கொண்டு வரப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது 

 

அருங்காட்சியகம்

 அரசு அருங்காட்சியகம் கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. பொது மக்களுக்காக 1985 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. எல்லா வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இதனுள் தொல்லியல் கலைப்பொருட்கள், வரலாற்றுக்கு முந்தைய ஆயுதங்கள், சிற்பங்கள், வெண்கல சிற்பங்கள், மர சிற்பங்கள், கைவினைப் பொருட்கள், நாணயங்கள், தாவரவியல், நிலவியல் மற்றும் விலங்கியல் சார்ந்த பொருட்கள் சேகரித்து வைக்கப் பட்டுள்ளன. மானிடவியல், கலை,தொல்லியல், தாவரவியல், புவியமைப்பியல், நாணயவியல், விலங்கியல் முதலிய துறைகளுக்கு அன்றும் இன்றும் அருங்காட்சியகம் கருவூலமாகத் திகழ்கிறது. இங்குள்ள படக்காட்சியகத்தில் வட ஆற்காடு மாவட்டம் தொடர்பான வரலாற்று நினைவு சின்னங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தந்தத்தால் செய்யப்பட்ட சதுரங்கப் பலகை, இலங்கை நாணயங்கள், பல்லவ மற்றும் விஜயநகர காலத்தைய கற்சிற்பங்கள் முதலியன சிறப்பம்சங்களாகும். ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் படித்தல் போன்ற கலைசார் கல்வி நடவடிக்கைகளும் இங்கு மேற் கொள்ளப்படுகின்றன

 

ரத்தினகிரி முருகன் கோயில்

 வேலூரிலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரத்தினகிரி மலை உச்சியில் பாலமுருகன் கோயில் உள்ளது.பாலமுருகனடிமை சுவாமிகள் இக்கோயிலைக் கட்டி நிர்வகித்து வருகிறார். 14 ஆம் நு}ற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் முருகனின் அருளாலும், பாலமுருகனடிமை சுவாமிகளின் அருளாலும், பக்தர்களின் அருளாலும் ஒளிர்வதாக நம்பப்படுகிறது.காலை ஆறு மணி முதல் மாலை எட்டு மணி வரையிலும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். தேவர்களின் கடவுளாக நம்பப்படும் முருகன் ரத்தினகிரியில் வாழ்ந்து அருள்பாலிப்பதாக மக்கள் நம்புகிறார்கள்

 

பொற்கோயில்

 வேலூரின் தென் முனையில் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமலைக்கோடி என்னுமிடத்தில் ஸ்ரீபுரம் பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுள்ள முக்கிய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஸ்ரீநாராயணி பீடத்தால் கட்டப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ 600 கோடி செலவிடப்பட்டு 55000 சதுர அடி கோயிலாக இது கட்டப்பட்டுள்ளது. 1500 கிலோ தங்கத் தகடுகள் இக்கோயில் முழுவதும் வேயப்பட்டுள்ளது. தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவை இரவு நேரத்தில் வேலூரின் முக்கிய சாலையில் செல்வோர் கண்ணை கவரும் வகையில் நவீன விளக்கு ஒளியில் பிரகாசிப்பது இதன் சிறப்பாகும். தற்ப்போழுது ஸ்ரீலட்சுமி நாராயணி அம்மனுக்கு மட்டும் உள்ள சந்நிதி பெருமாளுக்கும் தனி கற்கோயிலாக உருவாக்கப்படுகின்றது

 

அமிர்தி உயிரியல் பூங்கா

 இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் அமிர்தி உயிரியல் பூங்கா காணப்படுகிறது. இப்பூங்கா வேலூர் நகரில் இருந்து சுமார் 16 மைல் அல்லது 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ள அமிர்தி உயிரியல் பூங்காவில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும் காணப்படுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021