வால்ட் டிஸ்னி (WALT DISNEY)
பெயர் : வால்ட் டிஸ்னி
பிறப்பு : 05-12-1901
பெற்றோர் : எலியாஸ் டிஸ்னி, புளோரா கோல் டிஸ்னி
இடம் : சிக்காக்கோ
வகித்த பதவி : Walt Disney Company நிறுவனர்
வரலாறு:-வால்ட் டிஸ்னி..!!
🐭இன்றைய உலகில் கேலிச்சித்திரம், கார்ட்டூன்கள் பார்த்திராத குழந்தைகளே இல்லை என்று கூறலாம்.
🐭இன்று கார்ட்டூன் சேனல்களில் வரும் சோட்டா பீம், டோரா, பென் 10, போக்கிமேன் போன்ற கதாபாத்திரங்களை இன்றைய குழந்தைகள் அனைவரும் அறிந்ததே.
🐭இந்த கதாபாத்திரங்களுக்கு முன்னோடியாக இருந்த ஒரு முக்கியமான கதாபாத்திரம் எது என்று உங்களுக்கு தெரியுமா?
🐭ஆரம்ப காலத்தில் அதிகமான குழந்தைகளையும், பெரியவர்களையும் கவலைகளை மறந்து சிரிக்க வைத்த ஒரு கதாபாத்திரம் அதுதான்.
🐭உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று அனைவரும் சொல்வார்கள். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர்.
🐭ஆனால், உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்றால் அது நமக்கெல்லாம் வியப்பாகத்தான் இருக்கும். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கேலிச்சித்திர உலகில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகை கொடிகட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ் (Mickey Mouse).
🐭இந்த எலிதான் அன்றைய காலக்கட்டத்தில் கற்பனை உலகில் அனைவரையும் சிரிக்க வைத்த மிக முக்கியமான கதாபாத்திரம். அந்த காலக்கட்டத்த்தில் இந்த எலியை பார்த்திராதவர்கள் என்பது அரிதான ஒன்றே. இந்த எலியினால் வயிறு வலிக்க சிரித்தவர்கள் ஏராளம்.
🐭கார்ட்டூன் என்றாலே உடனே நமக்கு நினைவில் வருவது இரண்டு. ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி, மற்றொன்று மிக்கி மவுஸ். இதைக் கடக்காமல் நம் குழந்தைப் பருவம் முற்றுப்பெற்றிருக்க வாய்ப்பில்லை. பார்த்து மகிழும் தொலைக்காட்சி பொழுதுபோக்குகளில் ஆரம்பித்து, படுக்கையில் கட்டிப்பிடித்துத் தூங்கும் பொம்மை வரை உயிருள்ள பொருளாகவே வாழ்ந்து வந்தது மிக்கி மவுஸ்.
🐭பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் வால்ட் டிஸ்னி (Walt Disney).
🐭வால்ட் டிஸ்னி 1901ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிக்காகோவில் எலியாஸ் டிஸ்னிக்கும், புளோரா கோல் டிஸ்னிக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார். வால்ட் டிஸ்னியின் சகோதரர்கள் ஹெர்பர்ட், ரேமண்ட் மற்றும் ராய் ஆகியோர் ஆவர். இந்த தம்பதியர் டிசம்பர் 1903ஆம் ஆண்டு ரூத் என்ற ஐந்தாவது குழந்தையை பெற்றனர். வால்ட் டிஸ்னிக்கு சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், தீட்டுவதிலும் ஆர்வம் இருந்தது.
எலியாஸ் டிஸ்னி - புளோரா கோல் டிஸ்னி
🐭வால்ட் டிஸ்னிக்கு நான்கு வயதாக இருந்தபோது அவர்களுடைய குடும்பம் மிசோரிக்கு சென்றது. ஏனெனில் அங்குதான் அவர்களுடைய மாமா நிலம் வாங்கி வசித்து வந்தார். அங்கு சென்ற வால்ட் டிஸ்னி படம் வரையும் திறனை வளர்த்தார். ஏழு வயதானபோதே அவர் ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பனை செய்வார். இவர் முதன்முதலாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவருக்கு ஒரு குதிரை படம் ஒன்றினை பணத்திற்காக வரைந்து கொடுத்தார்.
🐭வால்ட் டிஸ்னி வண்ண பென்சில்கள் மற்றும் கிரயான்ஸை கொண்டு தன்னுடைய திறன்களை மேலும் வளர்த்துக் கொண்டார். 1909ஆம் ஆண்டில் இவரும், இவருடைய சகோதரி ரூத் இருவரும் மார்செலின் பார்க் பள்ளியில் பள்ளி படிப்பை துவங்கினர். 1911ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னியின் குடும்பம் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரத்திற்கு சென்றனர். பின்பு கிரென்டன் இலக்கண பள்ளியில், வால்ட்டர் ஃபெஃப்பியர் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. வால்ட் டிஸ்னி, தன்னுடைய வீட்டில் இருந்த நேரத்தை விட இவருடன் இருந்த நேரம் தான் அதிகம்.
வால்ட் டிஸ்னி
🐭பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதிலாக அவர் எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டிருப்பார். தந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு அவரின் தாயார் ஊக்கமூட்டினார்.
🐭தி கன்சாஸ் சிட்டி ஸ்டார் மற்றும் கன்சாஸ் சிட்டி டைம்ஸிற்கான செய்தித்தாள் விநியோக அனுமதியை வால்ட் டிஸ்னியின் தந்தை எலியாஸ் வாங்கியிருந்தார். வால்ட் டிஸ்னி மற்றும் அவரது சகோதரர் ராய் தினமும் காலையில் 4:30 மணிக்கு எழுந்து கன்சாஸ் சிட்டி டைம்ஸ் செய்தித்தாள்களை பள்ளி செல்லும் முன்பாக விநியோகம் செய்வர். பின் பள்ளி முடிந்த பின் தி கன்சாஸ் சிட்டி ஸ்டார் செய்தித்தாள்களை விநியோகம் செய்வர்.
🐭இதனால் பள்ளிப்பாடத்தில் மோசமான தரங்களையே (grades) பெற்றார் வால்ட் டிஸ்னி. ஆனாலும், தன்னுடைய தினசரி செய்தித்தாள்களை விற்பனை செய்வதை ஆறு வருடங்கள் தொடர்ந்து செய்தார். மேலும், சனிக்கிழமைதோறும் கேலிச்சித்திரம் வரைவதற்காக சிறப்பு வகுப்புகளுக்கும் சென்றார்.
வால்ட் டிஸ்னியின் தனித்திறமை..!!
🐭வால்ட் டிஸ்னி ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத்திறமையை வளர்த்துக்கொண்டார். வால்ட் டிஸ்னி தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல் பள்ளியில் நடித்துக்காட்டுவார். ஆசிரியர்கள் அவரை கதை சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். அவர் கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்வார்.
🐭1917-ல் டிஸ்னி குடும்பம் மீண்டும் சிக்காக்கோவுக்கு இடம்பெயர்ந்தது. சிக்காக்கோவின் மெக்கின்லி உயர்நிலைப்பள்ளியில் (McKinley High School) ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. அவர் பள்ளி அளவில் செயல்படும் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். அதில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்தார். தந்தைக்கு தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.
🐭மெக்கின்லி பள்ளியில் சேர்ந்த வால்ட் டிஸ்னி, சிக்காக்கோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது.
🐭1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வால்ட் டிஸ்னி ஆம்புலன்ஸ் வெளிப்புறத்தில் அற்புதமான கார்ட்டூன் சித்திரத்தை வரைந்து வைத்திருந்ததால் அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது.
🐭செஞ்சிலுவைச் சங்கப் பணி முடிந்து ஊருக்குத் திரும்பிய வால்ட் டிஸ்னி, பலரின் சிபாரிசுகளைப் பிடித்து கன்சாஸ் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் உதவியாளராக பணியில் சேர்ந்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. அவருக்கு அரசியல் சமூக கோபம் போதிய அளவில் இல்லை என்றும், அதனால் பத்திரிக்கை கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு அவர் ஒத்துவரமாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு, வேலையில் இருந்து சில மாதங்களில் வெளியேற்றப்பட்டார்.
🐭பின்னர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான எடுபிடி வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கேயும் கிறிஸ்துமஸ் சீசன் வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள். அந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னியின் நண்பரானார். இருவரும் சேர்ந்து ஐவர்க்ஸ்-டிஸ்னி வரைகலை நிறுவனத்தை தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை.
முதல் நிறுவனம் :
🐭1922ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னிக்கு 21 வயதானபோது Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் ராயுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார். அது தோல்வியை தழுவியது. இதன்பின் நிறுவனம் மிக மோசமான நிலைமைக்குச் சென்றது.
Oswald the Lucky Rabbit
🐭ஆனால், அந்த முதல் தோல்வி வால்ட் டிஸ்னியை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத வால்ட் டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார்.
Mickey Mouse
🐭அப்போது உலகிற்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் Mickey Mouse. ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே Mickey Mouse உலகப்புகழ் பெற்றது. ஹாலிவுட்டின் கவனம் வால்ட் டிஸ்னியின் பக்கம் திரும்பியது. மிக்கி மவுஸ்க்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார்.
Mickey Mouse
🐭அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில், மிக்கி மவுஸ் அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்.
The Skeleton Dance
🐭1932ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித்தந்த Flowers and Trees என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. Mickey Mouse என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் Donald Duck என்ற வாத்து.

கருத்துகள்
கருத்துரையிடுக