இடுகைகள்

👬அரசு ஊழியர் யார்?🧍‍♂️ (Govt Emplayees)

படம்
  தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும். ”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும். தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.. 1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class) ...

புனித் (Punith Rajkumar)

படம்
          புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர். 46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது. நேற்று இரவு 12 மணி வரையிலும்  பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே  நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித். இன்று காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒ...

புதிதாக ஏதாவது பொருள் வாங்கும் போது அதில் உள்ள சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடுபவரா நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது

படம்
  புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க... வீட்டில் நாம் புதிதாக ஏதேனும் பொருள்கள் வாங்குகின்ற பொழுது, அதற்குள் சிறியதாக இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட் ஒன்றை வைத்திருப்பார்கள். அந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை கீழே தூக்கிப் போடாமல் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். நாம் ஏதேனும் புதுப்பொருட்கள், செப்பல்கள், டிரஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இவையெல்லாம் வாங்கினால் அதனுள் சின்னதா ஒரு பாக்கெட் வைத்து இருப்பார்கள். அது தான் சிலிக்கா பாக்கெட். அதில் குழந்தைகள் கையில் படாமல் அப்புறப்படுத்தவும் என்று எழுதியிருக்கும். நாமும் அது எதற்கு என்று தெரியாமலே தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். இவற்றில் இருக்கும் நன்மைகளை நீங்கள் அறிந்தால் அதை கீழே போட மனசு இருக்காது. தம்மா துண்டு பாக்கெட்டுக்குள் அவ்வளவு நன்மைகள் இருக்காம் . இந்த சிலிக்கான் பாக்கெட்டுகள் ஒரு உலர்விப்பான் மாதிரி செயல்படுகிறது. பொருட்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை எப்பொழுதும் ப்ரஷ்ஷாக வைத்து இருக்குமாம். சரி இந்த பாக்கெட்டை கொண்டு நாம் எப்படியெல்லாம் பயன் அடையலாம் வாங்க...

நடைபயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

படம்
  *Bioclock என்றால் என்ன?*  நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.  நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.  50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.  அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது. 70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.  சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.  எனவே நண்பர்களே,  1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.  2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.  3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.  4. சு...

ஆயுஷ்மன் பாரத் யோஜனா என்றால் என்ன?

படம்
  பிரதான் மந்திரி ஜான் அரோயா அபியான் (Pradhan Mantri Jan Arogya Abhiyaan) – ஆயுஷ்மன் பாரத் யோஜனா திட்டம் (Ayushman Bharat Yojana Scheme) என்பது இந்தியாவில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆகும். ஆயுஷ்மன் திட்டம் பொதுத்துறை சுகாதார பராமரிப்புத் துறை, உள்கட்டுமானம், நிதி மற்றும் வளங்கள் இல்லாமை உள்ளிட்ட தற்போதைய குறைபாடுகளை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஆயுஷ்மன் பாரத் யோஜனா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆயுஷ்மன் பாரத் யோஜனா கீழ் 100 மில்லியன் ஏழை பிபிஎல் குடும்பங்களை மத்திய அரசு நிர்ணயிக்கும் அடிப்படை நோக்கமானது இந்தியாவில் இரண்டாம்நிலை, முதன்மை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்துவது மற்றும் அனைத்து அவசர குடும்பங்களுக்கான அவசரநிலை சூழ்நிலையில் நிதி பாதுகாப்பை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ், சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மற்றும் தேசிய சுகாதாரத் திட்டம் போன்ற அரசு அறிமுகப்படுத்திய 2 முக்கிய சுகாதார முயற்சிகள் உள்ளன. ஏழை மக்களுக்கு சுகாதார தொடர்பான பிரச்சினைகளை அகற்றும் நோக்கத்துடன் இந்த 2 நாடுகளை...

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

படம்
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.  எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின்...

ராமச்சந்திர நாயக்கர்

படம்
பெயர் : ராமச்சந்திர நாயக்கர் இடம் : சேந்தமங்கலம், நாமக்கல் வகித்த பதவி : விடுதலை போராட்ட வீரர், படைத் தளபதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம், நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர் ராமச்சந்திர நாயக்கர். கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது. கொங்கு நாட்டில் 17ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. விசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படுத்தி அதன்படி தென்தமிழகம், கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர். பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது. அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று. இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெறும் வரையில் ஆட்சி செய்துள்ளார். அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும், திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆ...