இடுகைகள்

கண்டறிய இயலாச் சான்று ! [ Not Traceable Certificate ]

படம்
     ஆவணங்கள் காணவில்லை எனச் சான்று பெற அல்லல்பட்டதற்கு விடிவு, சென்னை உயர்நீதிமன்ற மனு CRL.O.P.No.3307/2022 - ன் மூலம் கிடைத்துள்ளது.       அதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை வழிகாட்டுதல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 1. ஆவணங்கள் காணவில்லை என காவல் நிலையத்தில் விண்ணப்பிப்போர், அந்த ஆவணங்களின் சொத்துரிமையாளராகவோ அல்லது அவரின் அதிகாரம் பெற்ற முகவராகவோ இருக்க வேண்டும். 2. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தோடு கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் :    (i). தொலைந்துபோன ஆவணத்தின் சார்பதிவாளர் அலுவலகத்தின் ( விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதத்திற்குள் பெறப்பட்டிருக்க வேண்டும்) சான்றிட்ட இரண்டு நகல்கள்.    (ii ). விண்ணப்பதாரரின் அல்லது அவரது முகவரின் அன்றையக் காலத்திய நிழற்படம்.     (iii ). ஆதார் அட்டை (அ) வாக்காளர் அடையாள அட்டை (அ) கடவுச்சீட்டின் நகல்  ( பிற சான்றுகள் ஏற்கப்படமாட்டாது ).      (iv ). பத்தி 6 - ல் குறிப்பிட்டவாறு மெய்ப்படிவ செய்தித்தாள் விளம்பரங்கள்.     ( v ). பத்தி 7,8 - களில் குறிப்பிட்டவாறு...

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு!

படம்
தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்! இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் ஒரு சில நூலகங்களிலும் இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்! தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது! இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று!  தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது! டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது! இது மட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது. வடக்கு மத்தி மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது!  ஒவ்வொரு மண்டலமும் ஜஜியின் தலைமையில் இயங்கி வருகிறது! இது தவிர சென்னை சென்னை புறநகர் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மாநகரங்களும் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது! தமிழகத்தில் 30 காவல் மாவட...

*🌎🙋‍♂️சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள். (அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு)*

படம்
*பகிர்வு  - அறிவு பரவல்✍️* 1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும். 2) வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி 1) A/c நெம்பர் 2) ATM DEBIT CARD நெம்பர், 3) PIN நெம்பர் 4) CVV நெம்பர், 5) OTP நெம்பர் 6) நெட் பேங்கிங் PASS WORD 7) CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம். 3) சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு, உங்களது உங்கள் வங்கி கணக்கை குறிவைத்து 1) Bank A/c No, 2) Aadhar Card No, 3) PAN Card No, etc பெற்றுக்கொண்டு உங்கள் செல்லுக்கு வந்த OTP விபரம் கேட்டு பணத்தை பறிக்க முயற்சி செய்யக்கூடும். விபரம் தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம். 4) உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ / லோன் தொகை பிடிக்கப்பட்டத...

பொருளாதார நெருக்கடியை சந்தித்த லெபனான்

படம்
உலகின் மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த நாடுகள் என்கிற பட்டியலில் அண்மையில் போய்ச் சேர்ந்துகொண்ட நாடு லெபனான். அடுத்த நாடு எது என்று நம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். சென்ற வருடம் லெபனானில் இருந்தபோது, அப்பொருளாதார நெருக்கடியால் மக்கள் பட்ட துன்பங்களை நேரடியாகப் பார்த்தேன். ஆறே மாதங்களில் Middle class என்கிற ஒரு மக்கள்கூட்டம் முற்றாக அழிந்துவிட்டிருந்தது. இவ்வகையான பொருளாதார நெருக்கடிகளின் போது இரண்டு wealth groups மட்டுமே மிஞ்சும். ஒன்று rich மற்றையது poor. தவிர, இவ்வாறானதொரு அசாதாரண சூழலில் இன்னுமொரு மாற்றமும் நமக்குத் தெரியாமல் நடக்கும். Rich will become richer. Poor will become poorer. Middle class என்கிற ஒரு இனம் அதுவாகவே அழிந்துபோய்விடும். லெபனானின் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதானமான காரணங்கள் இரண்டு. Fiscal crisis மற்றையது அரசியல் இஸ்திரத்தன்மை. தவிர, devaluation of local currency மற்றும் USD liquidity. முதல் மூன்று மாதங்களுக்குள் நடந்த முடிந்த அத்தனையும் மக்களின் கண்களுக்குப் புலப்படாத அழிவுகளாக இருந்தன. சுமார் 5’000 தனியார் வியாபாரங்கள் (small & medium en...

அனைத்து #ஆடைத்தொழிற்சாலை #பெண்களுக்கும் #சமர்ப்பிக்கிறேன்...🙏🙏 2 நிமிடம் மட்டும் ஒதுக்குங்கள்

படம்
ஆசைகளை எல்லாம்  அடக்கிவைத்த ஏக்கம்.....  🪡 ஐந்து மணி நேர தூக்கம்  ஒரு மணி நேர சாலை பயணம்  ஒன்பது மணி நேரம்  வரை  நீடிக்கின்ற என் பணியின் சாபம்........!🪡 என்னை  பார்ப்பவரின் ஏளனம்  பறித்து எடுக்கிறது, மனதை பதற வைக்கிறது, மரியாதையின்  மகுடம் வேண்டாம், மனிதன் தானே என்ற மனம்  போதும் ,                                     🪡 அழகாக நீ அணியும் ஆடையின் பாதி கூட இல்லை என் ஊதியம், அறிவாயோ..?அந்த ஆடையினை தைத்தவள் நான் என்று,,,!                                   🪡      அழகாக வாழ தான்  ஆசை கொள்கிறேன்... சுய உழைப்பில்   தான்  ஊதியம் பெறுகின்றேன்..                                     🪡 மதி அற்று போய் அல்ல  தையலில் நுளைந்தேன்.. விதி ...

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புண்கள் குணமாகும் மருந்து படித்து பயன் அடையலாம்.அன்பு தோழர்களே...

படம்
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.! நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். மேலும் விபரங்கள் கீழே.!                👇👇👇👇 சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு  மருத்துவாிடம் சென்றால், சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,  காலில் இருந்தால்  காலை துண்டித்து விடுவதும்,  தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை. காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,  எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,  புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்...

புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை வியாதியை குணப்படுத்த இந்த ஒரு காய் போதும்

படம்
  நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான். இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது. 8 Health Benefits of Momordica ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது அதலைக்காய் என்னும் அற்புத மருந்து. அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை. அதலைக்காய் இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில...