இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருவாரூர் மாவட்டம்

படம்
திருவாரூர் மாவட்டத்தின் வரலாறு : பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. ( மற்ற நான்கு ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர் ). திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட ஆண்டு : தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து, திருவாரூர் மாட்டம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து இம்மாவட்டம் உண்டாக்கப்பட்டபோது ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் 1998இல் தமிழக அரசின் ஆணையை தொடர்ந்து, மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறத...

யூடிஆர் UDR (கூட்டு பட்டா) கிராமநத்தம் புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை...!

படம்
  UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது, கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர் போன்ற பல ஆவண பிழைகளால் ஏற்படும் சிக்கல்கள் பல பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்றம் செய்தல் இலகு அல்ல வீடுகட்ட அங்கீகாரம் கிடைப்பது கடினம்  கடன் கிடைக்கபெறுவது கடினம் போன்ற பல சிக்கல்கள் எழும் இதனை வட்டாசிரியர் அலுவலகம் அணுகி சரி செய்தல் முறை. UDR / கிராம நத்தம்/ FMB யில் திருத்தங்கள் செய்ய என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதின் நடைமுறை விளக்கம். முதலில் உங்கள் ஆவணத்தில் உள்ள பிழை என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இதில் உங்களுக்கு தெளிவில்லை என்றால் அறிந்தவர்களிடம்  விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளுதல் அவசியம் என்ன தவறு தவறுதலுக்கான காரணம் இவற்றை அறிந்து கொண்டால் இதனை சரி செய்தல் இலகுவாகும். நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும்...

Tamil Nadu Police – Cyber Crime Alert

படம்
*Subject* : Through matrimonial sites fraudster promises to marry the victim and extorts money in the name of gifts. *Nature of Information:*  Fraudster creates fake profiles on matrimonial websites posing as a professional, settled in a foreign country and target women who are looking for profiles from abroad. They establish trust and get close to the women, then propose marriage and cook up a story such as sending gifts and it was stopped at the airport by Customs officer and needs to be cleared and there is an urgent need of money and ask to transfer the amount in lakhs. *Tactics of Cyber Criminals:*  1) Fraudster creates fake profiles on matrimonial websites posing as software  professionals or doctors or marketing professionals, settled in a foreign country, and target women who are looking for profiles from abroad. 2) They establish trust and get close to the women through mails, online chats or at times by even through phone calls mainly through foreign telep...

இது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, ஆண் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. குழந்தைகளை கூட காமவெறியோடு தான் பார்க்கிறார்கள்.

படம்
  உலகில் மாம்சத்தின் போராட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. தன் குடும்பத்தின் நபர்களை கூட தூய்மையான அன்போடு பழக முடியாத மிருகங்களாக மனிதர்கள் மாறி வருகிறார்கள்.  வெளிப்புறத்தில் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறையாக, ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருப்பார்கள், ஆனால் இரகசிய பாவங்களில் மீள முடியாமல் சிக்கி இருப்பார்கள்.  ஆபாசபடம் பார்ப்பது, தவறான உறவில் இருப்பது போன்றவற்றால் அவர்களுடைய மனசாட்சி கல்லாக இருக்கும். சரி/தவறு என எதுவும் நிதானிக்க தெரியாது. மாம்சத்தின் படியே நடப்பார்கள்.  இவர்களின் கண் பச்சிளம் பிள்ளை என்றும் பார்க்காது.  மனிதனை விட கொடுமையான மிருகம் வேறு எதுவும் இருக்காது.  பாவம் செய்கிற எவனும் பிசாசினால் உண்டாகி இருக்கிறான் என இயேசு கிறிஸ்து சொன்னது போல, அவர்களுடைய ஆத்துமாவில் பிசாசு தன்  வார்த்தைகளை தூவி இருக்கிறான்.  அவர்கள் பிசாசை போலவே நடப்பார்கள். பிசாசுக்கு ஆயத்தம் செய்யப்பட்டு இருக்கும் அக்கினிகடலில் நிச்சயம் தள்ளப்படுவார்கள். அது பாவத்தில் மூழ்கிய யாவற்றையும் விறகு போல  எண்ணி எரிக்கிறது. இன்று பரிசுத்த ஆவியானவர் நம்மை சுத்தம் செய்ய வி...

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்

படம்
நீங்கள் பேருந்தில் பயணம் செய்பவராக இருந்தால் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில்கூட பேருந்து திடீரென நிற்கும். அதில் சில போலீஸ்காரர்கள் ஏறிக்கொள்வார்கள். டூயூட்டிக்குப் போகும்போதோ அல்லது டூயூட்டி முடிந்து வரும்போதோ பெண் காவலர்கள் உள்ளிட்ட ஆரம்பநிலை காவலர்கள் அரசுப் பேருந்துகளை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல சென்னையிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும்கூட கைதியை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்துவதற்கு அரசுப் பேருந்துகளில் அழைத்துச் செல்வார்கள்.   ’இவங்களுக்குல்லாம் யாரும் டிக்கெட் கேட்க மாட்டாங்கப்பா’ என்று பேருந்தில் போலீஸாரைப் பார்த்ததும் சில கமென்ட்டுகள் எழும். அதேநேரம் பேருந்தின் பாதுகாப்புக்காக டூயூட்டி பார்க்கவில்லை என்றால்கூட... அந்தப் போலீஸார் பேருந்தில் ஏறிச்செல்லும் அந்த நிமிடங்களில் பேருந்துக்குள் இருப்பவர்களுக்கு, ‘நம்ம பஸ்ல போலீஸ் வருது’ என்ற பாதுகாப்பு உணர்வும், அத்துமீற நினைப்பவர்களுக்கு, ‘நம்ம பஸ்ஸில் போலீஸ் இருக்கு’ என்ற எச்சரிக்கை உணர்வும் இயல்பாகவே ஏற்படுவதுண்டு. இதுமாதிரியான நிலையில்தான்... “அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்...

Today History : 30.07.2021

படம்
👉 1863ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி மாடல் டி காரை உருவாக்கிய ஹென்றி ஃபோர்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தார். 👉 1930ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது. முக்கிய தினம் :- ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் 👉 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன. 👉 இதனைத் தடுத்திட ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கடைபிடிக்குமாறு அறிவித்தது. பிறந்த நாள் :- முத்துலட்சுமி ரெட்டி 👉 இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். 👉 அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார். 👉 இந்திய மாதர் சங்கத்தை தொடங்கி வைத்...

காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

படம்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா, சென்னை வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழக காவல்துறை பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பிரபாகரன், டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் பேசிய அவர், புதிதாக காவல்துறையில் சேர்ந்து பணியாற்றவுள்ள 86 பயிற்சி துணை கண்காணிப்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசியதாவது;- “தீயதை பொசுக்கும் தீயாகவும், அனைவருக்கும் பொதுவான வானமாகவும் இருக்க வேண்டும். குற்றங்களுக்குத் தண்டனை பெற்று தரும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களே நிகழாமல் தடுக்கும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் பால...

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் திருச்சி கார்பைன் புதிய ரக துப்பாக்கி அறிமுகம்

படம்
திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள படைகலன்  தொழிற்சாலையில் திருச்சி கார்பைன் என்ற  புதிய ரக துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவானது இன்று படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது அதன் பொது மேலாளர் சஞ்சய் திவேதி, திருச்சி கார்பைன் துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். இந்த புதிய ரக துப்பாக்கியானது படைக்கலன் தொழிற்சாலையில்  உருவாக்கப்பட்டது. இது சிறிய மற்றும் இலகு ரக ஆயுதமாகும். இதனை போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள (special muzzle booster)சிறப்பு முகவாய் பூஸ்டர் மூலம், துப்பாக்கி சூட்டின் போது எழும் ஒளி மற்றும் சத்தத்தை குறைக்கிறது. இங்கு துப்பாக்கியில் அசால்ட் ரைபிளின் வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தலாம். இதேபோல் அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே47ன் உதிரிபாகங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி கார்பன் புதிய ரக  துப்பாக்கியை பாதுகாப்பு வீரர்களின் கவச உடைக்குள் மறைத்து வைத்து பயன்படுத்த ஏதுவாக அமைக்கப்பட்...

பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால்

படம்
பெயர் : பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் இடம் : சண்டிகார் வகித்த பதவி : Flipkart நிறுவனர் வரலாறு:-Flipkart 👉உலகமே இன்று இணையத்தில்தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய சூழலில் இணையம் இன்றி எதுவும் எல்லை என்றாகிவிட்டது 👉முன்பெல்லாம் கடைக்கு சென்று, கூட்ட நெரிசலில் ஆடைகளையும் மற்ற பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்குவர். ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும் எல்லாப் பொருட்களும் வீடு வந்து சேரும் 👉இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியே. இன்று ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும் எல்லாம் நம் வசம் என்றாகிவிட்டது. இதில் ஒன்றுதான் ஆன்லைன் ஷாப்பிங். பெரும்பாலானோர் ஆன்லைனில் புக் செய்து தான் அதிகமாக பொருட்களை வாங்குகின்றன 👉தற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகங்கள் கொடிகட்டி பறக்கின்றன. ஒரு பொருளை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி அழைந்த காலமெல்லாம் இப்போது இல்லை. மொபைலில் வீட்டில் உட்கார்ந்தபடியே வேண்டிய பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கிவிடுகிறோம் 👉அப்படி ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு கம்பெனி தான...

தேவநேயப் பாவாணர்

படம்
பெயர் : தேவநேயப் பாவாணர் இயற்பெயர் : தேவநேயன் பிறப்பு : 07-02-1902 இறப்பு : 15-01-1981 பெற்றோர் : ஞானமுத்து தேவேந்தரனார், பரிபூரணம் அம்மையார் இடம் : சங்கர நயினார் கோவில், திருநெல்வேலி, தமிழ்நாடு புத்தகங்கள் : தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை, இலக்கணவுரை வழுக்கள், உரிச்சொல் விளக்கம், தமிழும் திரவிடமும் சமமா?, திராவிடம் என்பதே தீது, மொழி பெயர்முறை, நிகழ்கால வினைவடிவம், இசைத்தமிழ்க் கலம்பகம், இசையரங்கு இன்னிசைக் கோவை, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் வகித்த பதவி : தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு தேவநேயப் பாவாணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார். தமிழ் உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வட...

இசைஞானி இளையராஜா

படம்
பெயர் : இசைஞானி இளையராஜா இயற்பெயர் : ராசய்யா பிறப்பு : 02-06-1943 பெற்றோர் : ராமசாமி, சின்னத்தாயம்மாள் இடம் : பண்ணைப்புரம், தேனி வகித்த பதவி : இசையமைப்பாளர் விருதுகள் : லதா மங்கேஷ்கர் விருது, கலைமாமணி, பத்ம பூஷன் வரலாறு:-வாழ்க்கை வரலாறு தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். 1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள். இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தம...

சடகோபன் ரமேஷ் (SADAKOBAN RAMESH)

படம்
பெயர் : சடகோபன் ரமேஷ் பிறப்பு : 16-10-1975 இடம் : சென்னை வகித்த பதவி : கிரிக்கெட் வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு சடகோபன் ரமேஷ், இந்தியத் தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர். சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 19 தேர்வு கிரிக்கெட் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வு கிரிக்கெட் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2001 - 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். 2005-2007 காலப்பகுதியில் கேரளா கிரிக்கெட் அணியிலும், 2007-2008 காலப்பகுதியில் அசாம் கிரிக்கெட் அணியிலும் இணைந்து விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியில் முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றிய ஒரே ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் கொண்டுள்ளார். இவர் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்த நிக்சன் மெக்லீன் உடையது. சடகோபன் ரமேஷ் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மூத்த சகோதரனாக சஞ்சய் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார்.

வி. சாந்தா (V.SANTHA)

படம்
பெயர் : வி. சாந்தா பிறப்பு : 11-03-1927 இடம் : மயிலாப்பூர், சென்னை புத்தகங்கள் : My Journey, Memories, V Shanta வகித்த பதவி : புற்றுநோய் மருத்துவர் விருதுகள் : பத்ம விபூஷன்,பத்மஶ்ரீ,பத்ம பூஷன்,மக்சேசே விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு மருத்துவர் வி. சாந்தா இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இளமை வாழ்க்கை: சென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர் சாந்தா, பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார். இவர் மக்சேசே விருது, பத்மஶ்ரீ, பத்ம விபூஷண்,பத்ம பூஷண், நாயுடம்மா நினைவு விருது (2010), தமிழக அரசின் ஔவையார் விருது (2013) போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்....

இரா. நெடுஞ்செழியன் (R.NEDUNJELIYAN)

படம்
பெயர் : இரா. நெடுஞ்செழியன் பிறப்பு : 11-07-1920 இறப்பு : 12-01-2000 இடம் : திருக்கண்ணபுரம், பட்டுக்கோட்டை புத்தகங்கள் : கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த கழகம், திமுக, தீண்டாமை, திருக்குறள் தெளிவுரை, பாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு, நீதிக்கட்சியின் வரலாறு வகித்த பதவி : அரசியல்வாதி, இலக்கியவாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு இவர் பட்டுக்கோட்டையின் அருகேயுள்ள திருக்கண்ணபுரத்தில் 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், மதிவாணன் என்னும் மகனும் உள்ளனர். இவரது பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார். மருமகள் கல்யாணி மதிவாணன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக தற்பொழுது இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். இவ்வியக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, ஈ. வெ. கி. ச...

ஆன்லைனில் கல்வியா? யூடியூப்பில் வருமானமா?..

படம்
*கொரோனா காரணமாக இணைய வழியில் பாடம் நடத்திவரும் பள்ளி ஆசிரியர்கள் யூடியூப் தளத்தில் வருமானம் ஈட்டுபவர்களாக மாறியுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.* *கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் நிலையை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான வகுப்புகள் இணைய வழியில் நடைபெற்று வருகின்றன.* *இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் தங்களின் வகுப்பின்பாட காணொலிகளை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருவது அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் யூடியூப் தளத்தில் இருந்து வருமானம் பெறும் நபர்களாக ஆசிரியர்கள் மாறி வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.* *மாணவர்களை இணைய வழியில் நேரடியாக சந்திக்காமல் தங்களது யூடியூப் விடியோக்களின் இணைப்புகளை ஆசிரியர்கள் அனுப்புவதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் தடைபடுவதாக தெரிவிக்கும் கல்வியாளர்கள் ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத...

திருவள்ளூர் மாவட்டம் (Thiruvallur District)

படம்
திருவள்ளூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்த போது உருவாக்கப்பட்டது (1 ஜனவரி 1997) பெயர்க்காரணம்: இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுள ர் ( ஸ்ரீ திருஎவ்வுள ர் ஸ்ரீ திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும் உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுள ர், திருவெவ்வுள ர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் எனச் சிதைந்து வழங்குகின்றது. எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் சென்னை மாவட்டமும், வடக்கில் ஆந்திர மாநிலத்தின் நெல்லு}ர் மாவட்டமும்: தெற்கில் காஞ்சிபுரம் மாவட்டமும்@ மேற்கில் வேலலூர் மாவட்டம் மற்றும் ஆந்திரத்தின் சித்...

வெ. இராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai)

படம்
பெயர் : வெ. இராமலிங்கம் பிள்ளை பிறப்பு : 19-10-1888 இறப்பு : 24-08-1972 பெற்றோர் : வெங்கடராமன், அம்மணியம்மாள் இடம் : மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு புத்தகங்கள் : மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண், பிரார்த்தனை (கவிதை), நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறளும் பரிமேலழகரும், திருவள்ளுவர் திடுக்கிடுவார், திருக்குறள் புது உரை, கம்பனும் வால்மீகியும், கம்பன் கவிதை இன்பக் குவியல், என்கதை (சுயசரிதம்), அவனும் அவளும் (கவிதை), சங்கொலி (கவிதை), மாமன் மகள் (நாடகம்), அரவணை சுந்தரம் (நாடகம்) வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர் விருதுகள் : பத்ம பூஷன் வரலாறு:-வாழ்க்கை வரலாறு இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932இல் நடைபெற்ற உப்...

ப. சிதம்பரம் (P.Chidambaram)

படம்
பெயர் : ப. சிதம்பரம் பிறப்பு : 16-09-1945 பெற்றோர் : பழனியப்பசெட்டியார், லட்சுமி இடம் : கண்டனூர், சிவகங்கை, தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு ப. சிதம்பரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார். பிறப்பு: இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழனியப்பசெட்டியார், லட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் 16,1945ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவரது மனைவி பெயர் நளினி. இவருக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார். கல்வி: சென்னை கிருத்தவக் கல்லூரி பள்ளியில் படிப்பு. சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (புள்ளியியல்) சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. அரசியல் வாழ்க்கை: இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறை மத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முத...

சிவசங்கர நாராயண பிள்ளை (Sivasankara Narayana Pillai)

படம்
  பெயர் : சிவசங்கர நாராயண பிள்ளை இயற்பெயர் : எஸ்.எஸ். பிள்ளை பிறப்பு : 05-04-1907 இறப்பு : 31-08-1950 இடம் : செங்கோட்டை, தமிழ்நாடு வகித்த பதவி : கணித மேதை, பேராசிரியர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள் தொடக்க கல்வியை இலத்தூரில் கற்றார். அப்போது அவருடைய ஆசிரியர் சாஸ்தியார், அவருடைய கணிதத் திறமையைப் பார்த்து, அதிசயத்தார். திடீரென அவருடைய தந்தை இறந்ததும் அவர் பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். ஆனால், ஆசிரியர் சாஸ்திரியார் அவரை அணுகித் தொடர்ந்து படிக்க வற்புறுத்தியது மட்டுமல்லாமல், வறுமையிலிருந்த சாஸ்திரியாரே தனது சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை அவரின் கல்விக்காகச் செலவழித்து வந்தார். சாஸ்திரியாரின் கனவு வீண் போகாமல் தொடர்ந்து செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் எஸ்.எஸ். பிள்ளை வெற்றியடைந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில், இன்டர் மீடியட் முடித்து, பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் கணிதத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். 1929ஆம் ஆண்டு, ...

ரூபா தேவி (Rupa Devi)

படம்
 பெயர் : ரூபா தேவி பிறப்பு : 25-03-1989 பெற்றோர் : குருசாமி இடம் : திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : கால்பந்து விளையாட்டு வீரர் விருதுகள் : சக்தி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு ரூபா தேவி, 25 மார்ச் 1989ல் பிறந்தார். தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கியவர். 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா கால்பந்து நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ரூபா தேவி பெற்றார். இதுவரை, ஃபிஃபா அமைப்பின் பெண் நடுவர்களாக இந்திய பெண்கள் ஐவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரூபா தேவியின் விளையாட்டு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் திண்டுக்கல் கால்பந்து அமைப்பு கவனித்துக் கொண்டது. பி.எஸ்.சி மற்றும் பி.எட். கல்வியை பூர்த்தி செய்துள்ள ரூபா தேவி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘சக்தி விருது’, ரெயின் டிராப்ஸ் நிறு...

டி. கே. ராமமூர்த்தி (T.K.Ramamoorthi)

படம்
  பெயர் : டி. கே. ராமமூர்த்தி இயற்பெயர் : கிருஷ்ணசாமி ராமமூர்த்தி பிறப்பு : 15-05-1922 இறப்பு : 17-04-2013 பெற்றோர் : கிருஷ்ண சுவாமி இடம் : திருச்சிராப்பள்ளி, சென்னை வகித்த பதவி : இசையமைப்பாளர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு 1922 - ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி.கே. ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக்கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன். பின்னர் ஆர்.சுதர்சனம், டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராம மூர்த்தி, பின்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்தார். ஆயிரத்தில் ஒருவன்: 1950 மற்றும் 1960-களில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் சாகா வரம் பெற்றவை. கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இந்த இருவரும் இசையமைத்தனர். 20 ஆண்டுகள் இணைந்திருந்த இந்த இரட்டையர்கள் 1965-ம் ஆண்டு பிரிந்தனர். எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவனுக்குப் ...

அகிலன் (Akilan)

படம்
பெயர் : அகிலன் இயற்பெயர் : பி. வி. அகிலாண்டம் பிறப்பு : 27-06-1922 இறப்பு : 31-01-1988 இடம் : புதுக்கோட்டை, தமிழ்நாடு புத்தகங்கள் : வேங்கையின் மைந்தன் (இராசேந்திர சோழனின் கதை), கயல்விழி, வெற்றித் திருநகர், சித்திரப்பாவை, பொன்மலர் வகித்த பதவி : எழுத்தாளர் விருதுகள் : ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது,  ராஜா சர் அண்ணாமலை விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அசிம் பிரேம்ஜி (Azim Premji)

படம்
  பெயர் : அசிம் பிரேம்ஜி பிறப்பு : 24-07-1945 இடம் : குஜராத் வகித்த பதவி : Wipro நிறுவனர் வரலாறு:-அசிம் பிரேம்ஜி..!! 👉ஐ.டி துறையில் பல நிறுவனங்கள் கால் பதித்திருந்தாலும் அதில் மிகவும் பிரபலமடைந்த பெயர் பெற்ற நிறுவனங்கள் வெகு சிலவே. 👉அவ்வாறு கால் பதித்த நிறுவனங்களில் இந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தை பற்றிதான் இனிவரும் பகுதியில் பார்க்க உள்ளோம். முதலில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனமாக இருந்து தற்போது ஐ.டி நிறுவனங்களில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கிறது இந்த நிறுவனம். 👉தற்போதைய சூழலில் 50 வயது வரை வாழ்வதே போராட்டமாக இருக்கும்போது, ஒரு நிறுவனத்தை 50 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அது எந்த நிறுவனம் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா? 👉விப்ரோ நிறுவனத்தை பற்றியும், விப்ரோ நிறுவனத்தின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவரை பற்றியும்தான் இனி பார்க்க போகிறோம். 👉விப்ரோ நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனம் விப்ரோ, பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்தி...