இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எஸ் கஸ்தூரி ரங்கா ஐயங்கார் (S.KASTHURI RANGA AYYANAR)

படம்
பெயர் : எஸ் கஸ்தூரி ரங்கா ஐயங்கார் பிறப்பு : 15-12-1859 இறப்பு : 12-12-1923 பெற்றோர் : சேஷ ஐயங்கார் இடம் : கும்பகோணம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி, பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், ஹிந்து நிர்வாக இயக்குனர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு பிறப்பு கஸ்தூரி ரங்கன், கும்பகோணம் அருகேயுள்ள இன்னாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சேஷ ஐயங்காருக்கு மூன்றாவது மகனாக 15.12.1859-ல் பிறந்தார். சேஷ ஐயங்கார் குடும்பத்தினர் விஜயநகர சாம்ராஜ்யத்திலும் தஞ்சை மராட்டிய அரசிலும் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள். இன்னாம்பூரிலும் கபிஸ்தலத்திலும் பின்னர் கும்பகோணத்திலும் படித்தார். 1879 -ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கஸ்தூரி ரங்கன் பட்டம் பெற்றார். 1881-ல் சார்பதிவாளர் பணியில் சேர்ந்தார். பிறகு, சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர் 1884-ல் சட்டக் கல்வி முடித்தார். வழக்கறிஞரானதும் கோவையை நோக்கி நகர்ந்தார் கஸ்தூரி ரங்கன். அங்கு கெளரவ மாஜிஸ்திரேட்டாகவும், சிறையைப் பார்வையிடும் சிறப்புப் பார்வையாளராகவும் ஆட்சியரால் நியமிக்கப்பட்டார். அந்நாளில் ‘தி இந்து’ வின் ஆசிரியராக இருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் 1902-ல் ஓய்வுபெற்றார். அந்த பத...

முகம்மது இசுமாயில் (MOHAMMED ISHMAYIL)

படம்
பெயர் : முகம்மது இசுமாயில் பிறப்பு : 05-06-1896 இறப்பு : 05-04-1972 பெற்றோர் : மியாகான் ராவுத்தர் இடம் : திருநெல்வேலி, தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். குடும்பம்: திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான். பிரிட்டிசு இந்தியாவில்: தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் ந...

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (SEERKALI S.GOVINDARAJAN)

படம்
பெயர் : சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறப்பு : 19-01-1933 இறப்பு : 24-3-1988 பெற்றோர் : சிவசிதம்பரம், அவையாம்பாள் இடம் : சீர்காழி, தமிழ்நாடு வகித்த பதவி : பிண்ணனிப்  பாடகர் விருதுகள் : சங்கீத நாடக அகாதமி விருது, இசை பேரறிஞர் விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் 19 ஜனவரி 1933 ஆம் ஆண்டு சீர்காழியில் சிவசிதம்பரம், அவையாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர், தியானமே எனது, வதனமே சந்திர பிம்பமோ, செந்தாமரை முகமே, கோடையிலே இளைப்பாறி ஆகிய பாடல்களை இளமைப் பருவத்தில் விரும்பி பாடியுள்ளார். திரைப்படத்துக்காக இவர் பாடிய முதல் பாடல், 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல் ஆகும். இவர் சங்கீத நாடக அகாதமி விருது, இசைப் பேரறிஞர் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

சி.எஸ்.செல்லப்பா (C.S.CHELLAPPA)

படம்
  பெயர் : சி.எஸ்.செல்லப்பா பிறப்பு : 29-09-1912 இறப்பு : 18-12-1998 இடம் : சின்னமனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு புத்தகங்கள் : வாடி வாசல், ஜீவனாம்சம், சுதந்திர தாகம், எழுத்து இதழ் வகித்த பதவி : எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், கவிஞர், நாடக ஆசிரியர் விருதுகள் : சாகித்ய அகாதமி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு பிறப்பு சி.சு.செல்லப்பா, ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். ‘எழுத்து ’ என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், ‘சுதந்திர தாகம்’ போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். இவர் சி.சு.செல்லப்பா, தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார். தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார். மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்...

Today History : 30.08.2021

படம்
முக்கிய நிகழ்வுகள் :- 👉 1835ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரம் அமைக்கப்பட்டது. 🎬 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்தார். 🌆 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா மறைந்தார். முக்கிய தினம் :- சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் 👥 சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 👥 யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாள் :- ஜெ.ஜெ.தாம்சன் 🌹 நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் 1856ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்ற இடத்தில் பிறந்தார். 🌹 இவர் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். ...

சர் ஜெ.ஜெ. தாம்சன் (J.J.THOMSAN)

படம்
எலக்ட்ரானைக் கண்டுபிடித்த நவீன அணு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் ஜெ.ஜெ. தாம்சன் சர் ஜோசப் ஜான் தாம்சன் (Joseph John Thomson) டிசம்பர் 18, 1856ல் இங்கிலாந்தின் மான்செசுடரில் உள்ள சீத்தம் குன்று என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870ல் மான்செசுடரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து 'ஆதம்சு பரிசை' வென்றார். அதன் காரணமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் இவரின் தந்தை இறந்தபின் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய அறிவியல் கல்வி சிறப்பாக அமைந்தது.  1883ல் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் ஆய்வுமுறை இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிசு ஆய்வுக்கூடப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். ...

பட்டா தொடர்பான அரிய தகவல்கள் (INFORMATION ABOUT PATTA)

படம்
  பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம்  : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது) 2. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை (கட்டாய உரிமை மாற்றம்) 3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் (வாரிசுரிமை மாற்றம்) தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும், பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கி...

வாகன பதிவில் BH என்ற புதிய பதிவு எண் அறிமுகம்.

படம்
      புதுடில்லி: வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் 'பிஎச்' எனத் துவங்கும் பதிவு எண்ணை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளதாவது: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை, வேறு எந்த மாநிலத்திலும் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள் வாகன எண்ணை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் அலைச்சலைத் தவிர்க்கும் நோக்கில், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது, மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் 'பிஎச் - பாரத் தொடர்' (BH - Bharat series) எனத் துவங்கும் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. *யார் யாருக்கு பயன்?* இந்த அறிவிப்பின்படி, பிஎச் வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகா...

எஸ்.எஸ்.விஸ்வனாத தாஸ் (S.S.VISWANATHA DOSS)

படம்
பெயர் : எஸ்.எஸ்.விஸ்வனாத தாஸ் பிறப்பு : 16-06-1886 இறப்பு : 01-01-1941 பெற்றோர் : சுப்ரமணிய பண்டிதர்,ஞானாம்பாள் இடம் : சிவகாசி, தமிழ்நாடு வகித்த பதவி : நடிகர், ஆசிரியர், சுதந்திர போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு எஸ்.எஸ்.விஸ்வனாத தாஸ், 16 ஜூன் 1886 ஆம் ஆண்டு சிவகாசியில் பிறந்தார். இவர், நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர். இவர் நாடக நடிகர், தேசபக்தர் ஆவார். இவருடைய இளமைக் காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும், தேசிய உணர்வும் ஏற்பட்டு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டது. இவர் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழில் நாடக நடிப்பு. தனது தொழில் துறையிலேயே மக்களுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சுதந்திர தாகத்தை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவு செய்து கொண்டார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஓர் நல்ல நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார். இவருடைய நாடகங்களில் எல்லாம் தேச உணர்வுகளையும் தூண்டும் வகையில் எழுதுவார்.

தோழர் கே. டி. கே. தங்கமணி (T.K.THANGAMANI)

படம்
பெயர் : தோழர் கே. டி. கே. தங்கமணி பிறப்பு : 19-05-1914 இறப்பு : 26-12-2001 இடம் : திருமங்கலம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு கே. டி. கே. தங்கமணி இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர். பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். பிறப்பு: கே.டி.கே. தங்கமணி (எ) தங்கமணி நாடார், தமிழ்நாடு, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சட்டப்படிப்பை இலண்டனில் முடித்து 1947ம் ஆண்டு மதுரை திரும்பினார். இங்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாக 1947 மற்றும் 1948 ஆண்டுகள் (மதுரை டி.வி.எஸ் நிறுவனம் மற்றும் ஹார்வே மில்) போராடிச் சிறை சென்றுள்ளார். மேலும் 1957ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றியும் பெற்றார். தனது போராட்டங்கள் மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், அகில இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பதவி வகித்தார். மறைவு மற்றும் நினைவகம்: தன் 88ஆவது வயதில் 2001 டிசம்பர் 26 அன்று கோவைய...

எம். எஸ். சுப்புலட்சுமி (M.S.SUBBULAKSHMI)

படம்
பெயர் : எம். எஸ். சுப்புலட்சுமி பிறப்பு : 19-09-1916 இறப்பு : 11-12-2004 பெற்றோர் : சுப்பிரமணிய அய்யர், சண்முகவடிவு அம்மாள் இடம் : மதுரை, தமிழ்நாடு வகித்த பதவி : பாடகர், திரைப்பட நடிகர் விருதுகள் : பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, பாரத ரத்னா விருது, இந்திரா காந்தி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 1916 புரட்டாசி மாதம் 16 ஆம் திகதி அன்று தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார். அவரது தந்தையார் சுப்பிரமணிய அய்யர் என்று பின்னாட்களில...

சுரதா (SURATHA)

படம்
பெயர் : சுரதா இயற்பெயர் : இராசகோபாலன் பிறப்பு : 23-11-1921 இறப்பு : 19-06-2006 பெற்றோர் : திருவேங்கடம், சண்பகம் அம்மையார் இடம் : பழையனூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு புத்தகங்கள் : வார்த்தை வாசல், சாவின் முத்தம், தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986), துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976), சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு), சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974) வகித்த பதவி : தமிழ் கவிஞர், எழுத்தாளர் விருதுகள் : இராசராசன் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, வரலாறு:-வாழ்க்கை வரலாறு சுரதா தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதி வந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிற...

சுவாமி விவேகானந்தர் (SWAMY VIVEKANANDAR)

படம்
பெயர் : சுவாமி விவேகானந்தர் பிறப்பு : 12-01-1863 பெற்றோர் : விசுவநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி இடம் : கல்கத்தா வகித்த பதவி : ஆன்மிகவாதி வரலாறு:-சுவாமி விவேகானந்தர்..!! 👳 நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் படிக்கும்போது, அந்த தலைவர்கள் அத்தனை பேருக்கும் பின்னணியில் ஒரு உண்மையான உந்து சக்தியாக இருந்தவர் யார் என்றால், அவர் வேறு யாருமில்லை - சுவாமி விவேகானந்தர்தான். 👳 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த சமய தலைவர்களுள் ஒருவர். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்து சமயத்தை வளர்த்தவர். 👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் ஸ்ரீ 'ராமகிருஷ்ண மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.  👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் அவதாரம...

நெல்சன் மண்டேலா (NELSON MANDELA)

படம்
பெயர் : நெல்சன் மண்டேலா இயற்பெயர் : நெல்சன் ரோலிஹ்லா மண்டேலா பிறப்பு : 18/07/1918 இறப்பு : 05/12/2013 இடம் : தென்னாப்பிரிக்கா வகித்த பதவி : தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் விருதுகள் : பாரத ரத்னா, நேரு சமாதான விருது, உலக அமைதிக்கான நோபல் பரிசு வரலாறு:-நெல்சன் மண்டேலா...!! 👉 நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். 👉 நெல்சன் மண்டேலாவின் தந்தைக்கு நான்கு மனைவிகள் மற்றும் 13 பிள்ளைகள் இருந்தனர். அதில் மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் நெல்சன் மண்டேலா. 👉 இவரது இயற்பெயர் நெல்சன் ரோலிஹ்லா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன் என்பது இவர் கல்வி பயிலும்போது அவரது பள்ளி ஆசிரியரால் சூட்டப்பட்டதாகும். 👉 நெல்சன் மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். அப்போதே போர் புரியும் கலைகளையும் பயின்றார். 👉 நெல்சன் மண்டேலா இளம்பருவத்தில், ஒரு குத்துச்சண்டை வீரர். 'குத்துச்சண்டை ஒரு சமத்துவமான விளையாட்டு. குத்துச்சண்டை நடக்கும் மேடையில், மனிதர்களின் தரம், வயது, நிறம் மற்றும் அவர்களின் பணம் இவைகளெல்ல...

Today History : 27.08.2021

படம்
முக்கிய நிகழ்வுகள் :- ✈ 1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது. ☉ 1757ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் இந்திய நாணயம் கல்கத்தா நகரில் தயாரிக்கப்பட்டது. 📗 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் 198 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. ✍ 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. நினைவு நாள் :- ரோலண்ட் ஹில் 🍀 நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் 1795ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அப்பொழுது தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ஃபோர் பென்னி போஸ்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. 🍀 இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலை பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபா...

அலர்மேல் வள்ளி (ALARMELVALLI)

படம்
பெயர் : அலர்மேல் வள்ளி பிறப்பு : 14-09-1956 இடம் : சென்னை, தமிழ்நாடு வகித்த பதவி : பரத நாட்டிய கலைஞர், நடன இயக்குனர் விருதுகள் : பத்ம பூஷன் விருது, கலைமாமணி விருது, பத்மஶ்ரீ விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு அலர்மேல் வள்ளி, தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாநகரத்தில் 14 செப்டம்பர் 1956 ஆண்டு பிறந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். நடன அமைப்பாளர், பயிற்றுவிப்பு ஆசிரியர் என பங்களித்து வருகிறார். இவர் ஒரு இந்திய கிளாசிக்கல் நடனம் ஆடுபவராகவும் மற்றும் நடன இயக்குநராகவும் திகழ்ந்தார். 1984 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட நடிகைகளின் மையமாக விளங்கிய 'திப்பாஷிக்கா'வின் நிறுவனர் ஆவார். அங்கு அவர் பரதநாட்டியத்தை கற்பித்தார். 1991 ஆம் ஆண்டில், வையெஜயந்திமாலாவுக்குப் பிறகு பத்மஶ்ரீ விருது பெற்ற இரண்டாவது இளைய நடன கலைஞராக அலர்மேல் வள்ளி இருந்தார். இவர் பத்ம பூஷண் விருது, பத்மஶ்ரீ விருது, கலைமாமணி விருது போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

லீலாவதி (LEELAVATHI)

படம்
பெயர் : லீலாவதி பிறப்பு : 27-09-1957 இறப்பு : 23-04-1997 பெற்றோர் : வெங்கடாசலம்-இந்திரா இடம் : கோவில்பட்டு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு லீலாவதி, மதுரை மாநகராட்சி, வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர். இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனை. தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காகப் போராடியவர். பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை:  மதுரை மாநகரில் கைத்தறி தொழிலை பிராதனமாகச் சார்ந்திருக்கும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்-இந்திரா தம்பதியரின் மூன்றாவது புதல்வியாக 1957-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று பிறந்தார். அவர் 10வது வகுப்பில் படிக்கும்போது குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் நெசவு வேலை செய்தார். பெற்றோர் நிச்சயித்தபடி அவருக்கும் குப்புசாமிக்கும் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியென்று திருமணம் நடைபெற்றது. குப்புசாமி - லீலாவதி தம்பதியினருக்கு கலாவதி, துர்கா, டான்யா என்ற மூன்று மகள்க...

ஜெயமோகன் (JEYAMOHAN)

படம்
பெயர் : ஜெயமோகன் பிறப்பு : 22-04-1962 பெற்றோர் : எஸ்.பாகுலேயன் பிள்ளை, இடம் : திருவரம்பு, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு புத்தகங்கள் : ரப்பர், விஷ்ணுபுரம் (கவிதா பதிப்பகம்), பின் தொடரும் நிழலின் குரல் (தமிழினி பதிப்பகம்), பனிமனிதன் - சிறுவர் புதினம், கன்னியாகுமரி, கொற்றவை (புதினம்) (தமிழினி பதிப்பகம்), காடு ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, உலோகம், கன்னிநிலம், வெள்ளையானை வகித்த பதவி : புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர் விருதுகள் : சமஸ்கிருதி சம்மான் விருது, பாவலர் விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு கஸ்தூரி ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும். பிறப்பு ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார். ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. ஜெயமோகன், சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார...

ஃபிடல் காஸ்ட்ரோ (FIDEL CASTRO)

படம்
பெயர் : ஃபிடல் காஸ்ட்ரோ இயற்பெயர் : பிடல் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ் பிறப்பு : 13/08/1926 இறப்பு : 25/11/2016 பெற்றோர் : ஏஞ்சல் காஸ்ட்ரோ-லினா இடம் : கியூபா வகித்த பதவி : கியூபாவின் முன்னாள் பிரதமர் மற்றும் அதிபர் வரலாறு:-ஃபிடல் காஸ்ட்ரோ 👉 ஃபிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏஞ்சல் காஸ்ட்ரோ-லினா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரின் முழுப்பெயர் பிடல் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ். இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையார். 👉 ஃபிடல் காஸ்ட்ரோவின் தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ, கியூபாவிற்கு குடிபெயர்ந்தவர். அவர் கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏஞ்சல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார். அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். ஃபிடல் காஸ்ட்ரோவின் தாய் லினா, கியூப பெண்மணி ஆவார். 👉 இந்த தம்பதிக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் முதல் குழந்தை ஃபிடல் காஸ்ட்ரோ. இரண்டாவதாக பிறந்த குழந்தை ரவுல் காஸ்ட்ரோ. அடுத்த ஐவரும் பெண் குழந்தைகள். 👉 1930ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக சான்டியாகோ டி-கியூபாவில் ...

சீரடி சாய்பாபா (SEERADI SAIBABA)

படம்
பெயர் : சீரடி சாய்பாபா வகித்த பதவி : ஆன்மிகவாதி வரலாறு:-சீரடி சாய்பாபா !! 👉 ஒவ்வொருவரும் இந்த பூமியில் மனிதனாக பிறப்பதற்கு ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். அப்படி ஒவ்வொருவரும் புல், மரம், புழுவாக மற்றும் மேலும் பல உயிரினங்களாக பிறப்பெடுத்ததற்கு பிறகுதான் இந்த அரிய மானுட பிறப்பை எடுக்கின்றனர். 👉 ஆனால், இம்மானுடப்பிறவியின் முக்கிய நோக்கம் என்னவென்று தெரியாமலே பலர் தவறான வழிக்குச் செல்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்த சில ஞானிகள் தோன்றுவதுண்டு. அவ்வாறு தோன்றிய அவதார புருஷர்களில் அற்புதமானவர்தான் சாய்பாபா. ஒரு மகானாக சீரடி சாய்பாபா : 👉 சீரடி சாய்பாபா தனது பதினாறு வயதில், ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்தார். பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். 👉 அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் 'உடல் நிலை சரியில்லை' என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். 👉 அவருடை...

Today History : 28.08.2021

படம்
முக்கிய நிகழ்வுகள் :- 📻 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகில் முதல் முறையாக வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு அமெரிக்காவில் ஆரம்பமானது. 🌍 1789ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார். 🌊 1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார். 📰 1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது. பிறந்த நாள் :- அய்யன்காளி 🏁 தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத் தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார். 🏁 இவர் ஓய்வு இல்லாத கட்டாய உழைப்பு முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை 1904-ல் தொடங்கினார். கேரளாவில் முதல் முறையாக நடந்த இந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, 'ஞாயிற்றுக்கிழமை ஓய்வு' உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தது. 🏁 சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூ...

அக்டோபர் 1 முதல் மாத சம்பளத்தில் மாற்றம் : புதிய தொழிலாளர் சட்டம்

படம்
மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் கவனிக்க வேண்டிய முக்கியமான புதிய தொழிலாளர் சட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலாக்கம் செய்ய உள்ளது. இப்புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் ஊழியர்கள் பணியாற்றும் நேரம் அதிகரிக்கும், அதேபோல் சம்பளத்திலும் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. NMP திட்டத்திற்கு பின் இப்படியொன்று இருக்கா..?! குறிப்பாகச் சில ஊழியர்களின் கையில் பெறும் சம்பளத்தின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளது.  பணி நேரம் பணியாற்றும் நேரம் புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களின் பணி நேரத்தை தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தற்போது இருக்கும் 8 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கலாம். இது அனைத்து நிறுவனத்திற்கும் கட்டாயம் இல்லை, அதேபோல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படும். மேலும் பணியாற்றும் நேரத்திற்கு ஈடாகச் சம்பளம் அதிகரிக்கப்படும். இந்த முக்கியம் மாற்றம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் மூலம் வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை என்கிற கட்டமைப்பையும் இந்தியாவில் நிறுவனங்கள் அத...